Skip to main content

"விஷாலைப் பற்றி பேசியிருக்கோம்... கார்த்தி, ஹிப்ஹாப் ஆதியைப் பற்றியும் பேசுவோம்!" - 'பிளாக் ஷீப்' விக்னேஷ்காந்த்

Published on 20/02/2019 | Edited on 20/02/2019
rj vignesh

 

 

நடிகர் கார்த்தியுடன் பணிபுரிந்த அனுபவம்...

அவர் ரொம்ப ஜாலியானவர். அதைவிட, கார்த்தி அவர்கூட நடிக்குறவங்கள கம்ஃபர்ட்டா வச்சிப்பாரு, அவர் 16 படம் நடிச்ச பெரிய நடிகர், தேவ் அவரோட 17வது படம். நம்ப 2 படம்தான் பண்ணியிருக்கோம், யு-ட்யூப் வீடியோக்களில் நடிகர் சங்கம் உட்பட எல்லாரையும் கலாய்ச்சுருக்கோம். ஆனால், கார்த்தி சார் அதையெல்லாம் கண்டுக்காமல் சகஜமா போடா வாடான்னு பேசிக்குற அளவுக்கு கம்ஃபர்ட் ஸோன்ல நம்பள வச்சுப்பாரு. அவர்கிட்ட நிறைய கத்துக்கலாம்.

இதுபோல நீங்க கலாய்ச்ச நபர்களை நேரில் சந்திக்கும் போது எப்படி இருக்கும்?

நம்ப ரொம்ப பங்கமா சிலரை கலாய்ச்சிருப்போம், அவங்கள பார்க்கவே முடியாது. அவங்களும் நம்மை பார்க்க நினைக்கமாட்டாங்க. சில பேர கொஞ்சமா கலாய்ச்சுருப்போம், அவங்கள சந்திக்கும்போது நல்லா பேசுவாங்க, முடியும்போது "நான் அந்த வீடியோவ பார்த்தேன்"னு சொல்லிட்டு போய்டுவாங்க. அப்படி சந்திச்சவுங்க யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சமீபத்துல நடந்த  ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் நாங்க பர்ஃபாம் பண்ணோம். அந்த நிகழ்ச்சிக்காக விஷால் எங்களை கூப்பிட போறாருனு செய்தி வந்துச்சு. 'ஏற்கனவே விஷால் எங்கமேல செம கோவத்துல இருப்பாரு, அவர் எப்படி எங்கள கூப்டுவாரு'னு நினைச்சோம். ஆனால், அவர் கால் பண்ணி, ஜாலியா "தம்பி நல்லா பண்ணிடுங்கடா, உங்க டீமுக்கு சொல்ல வேண்டியது இல்ல. உங்க ஸ்டேஜ்டா, விளையாடுங்க"னு சொல்லிட்டு வச்சிட்டாரு. என்னடா இது, ஒருவேளை கூட்டிக்கிட்டுபோய் அடிக்கப் போறாங்களோனு நினைச்சிகிட்டே போய் பர்ஃபார்ம் பண்ணிட்டு வந்தோம். நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு விஷால் எங்கள கூப்பிட்டு 'நல்லா பண்ணுனீங்க'னு சொன்னாரு. இதுபோல எவ்வளவு கலாய்ச்சு பேசுனாலும் அதை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கறவங்க இருக்காங்க. அதை நம்பித்தான் நிகழ்ச்சி பண்ணுறோம். இவ்ளோ நல்லா பழகுனப்பறமும் கார்த்தியை பற்றியோ ‘ஹிப் ஹாப்’ ஆதியை பற்றியோ எங்க மனசுல என்ன தோணுதோ அதை தொடர்ந்து பேசத்தான் போறோம். அதுதான் நம்மளோட ப்ளஸ், அதை விட்டுட்டா இவங்களுக்கே நம்பள புடிக்காம போய்டும்.

ஒரு சங்கம் ஆரம்பிச்சீங்களே? 

அந்த அளவுக்கு யாரும் அதை மறந்துடல. சங்கம் இருக்கு, ஆனால் செயல்படாம இருக்கு, அவ்ளோதான். கண்டிப்பா இந்த மாதத்துல தமிழ்நாடு டிஜிட்டல் ஊடக சங்கத்தோட (TNDMA) கூட்டம் நடைபெறும். எல்லாரும் கண்டிப்பா கலந்துக்கோங்க. பலபேர் சேர்ந்து உழைச்சு ஒரு படத்தை உருவாக்குறாங்க. அதை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்குறதுக்கும் நிறைய கஷ்டப்படுறாங்க. இந்த நிலையில யூ-ட்யூப் விமர்சகர்களுக்கும் பயப்பட வேண்டியிருக்கு. நிறைய பிரச்சனைகளும் இதனால நடக்குது.

இந்த யூ-ட்யூப் திரைப்பட விமர்சனங்கள் பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?

யாரோட கருத்தையும் யாரும் தடுக்க முடியாது. விமர்சனங்கள் தனி நபரோட பார்வை, அதை வெளிய சொல்றது அவரோட உரிமையும்கூட. எங்க வீடியோவுக்கும் நிறைய விமர்சனம் வரும். கழுவி கழுவி ஊத்துவாங்க. அது அவங்களோட உரிமை. சொல்றவுங்க என்ன வேணாலும் சொல்லட்டும். நம்ப சரியான கண்டன்ட் இருக்கிற படம் பண்ணுனா எல்லாம் சரியா நடக்கும்.

உங்களுக்கு திருமணமாகிவிட்டது என்று ஒரு வெப்சைட்ல போட்ருக்காங்களே?

இது மாதிரி நிறைய போட்டுருக்காங்க. நான் செத்துட்டேனு கூட சொல்லியிருந்தாங்க. என் பேர 'மேட்ரிமொனி' வெப்சைட்ல பதிவு பண்ணிருக்காங்க. அங்கிருந்து எனக்கு கால் பண்ணி கேக்குறாங்க. ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, ஆகும், ஆகாம போகாது.

எல்லோருக்கும் ஒரு கற்பனை, ஆசையெல்லாம் இருக்கும். அதுபோல, உங்களுக்கு வரப்போற மனைவி எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

எல்லாரையும் போல அம்மாவ மாதிரி ஒரு பொண்ணு வேணும்னு சொல்ல மாட்டேன். எனக்கு மனரீதியா ஒத்துப்போற பொண்ணு வேணும். நான் ஒரு முடிவு எடுத்தா விளக்கி சொல்லாமலே புரிஞ்சுக்குற பொண்ணா இருக்கணும், பெண் என்றால் சமைக்கத்தான் வேணுமானு பெண்ணியம் பேசாம நல்லா சமைச்சு கொடுக்கணும். இது ஒரு பெரிய ‘வானத்தை போல’ குடும்பம். இதுக்கு ஏத்த ‘மீனாவா’ஒரு பொண்ணு வேணும்.

தொடர்ந்து படம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எந்த மாதிரி கதாபாத்திரம் நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க?

குணச்சித்திரமான கேரக்டர் பண்ணனும். மணிவண்ணன் மாதிரி அரசியல் நய்யாண்டி, காமெடி, செண்டிமெண்ட் எல்லாம் கலந்து பண்ணனும்னு நினைக்குறேன். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“படத்தைப் பார்த்துட்டு போய் ஓட்டு போடுங்க” அரசியல் களமான திரையரங்கம் - உறியடி 2 குறித்து மக்கள் கருத்து   

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

சூர்யாவின் தயாரிப்பில் உறியடி 2 வெளியாகியுள்ளது. ஏற்கனவே உறியடி முதல் பாகம் பல அரசியல் கருத்துக்களைப் பேசி இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. தொடந்து உறியடி இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்ப்பார்பில் வெளியாகியுள்ளது. படம் தொடங்கும்முன் படத்தின் இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் “நேர்மையான ஒரு படத்தை, சொல்ல வேண்டிய ஒரு கதையை சொல்லியிருக்கோம். பிரச்சார நெடியில் இல்லாமல் முழுமையான படமாக இதை எதிர்ப்பார்கலாம்” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் படத்தைவிட அரசியல் குறித்தே அதிகமாக பேசினர்...

 

People's opinion about uiyadi 2


 
“ஸ்டெர்லைட் மாதிரி ஆலையை கொண்டு வரணும்னா அதுக்கான பாதுகாப்பு விஷயங்களை சரியா கவனிச்சுருக்கணும், அதை அரசாங்கமும் தெரிஞ்சுவச்சுருக்கணும், மக்களுக்கும் அது தெரியணும் அப்படினு செகண்ட் ஹாஃபில் சொல்லியிருக்காங்க. எப்பவுமே ஆளுங்கட்சி எதிர்கட்சியாகுது திரும்பவும் எதிர்கட்சி ஆளுங்கட்சியாகுது. எல்லாமே நம்ம போடுற ஓட்டுல தானே இருக்குனு ஃபர்ஸ்ட் ஹாஃபில் சொல்லியிருக்காங்க” 
 

“ஸ்டெர்லைட்டை மூட சொல்றாங்க, தயவுசெஞ்சு எல்லாரும் சேர்ந்து மூடிடுங்க. நானும் வறேன்”
 

“ஏப்ரல் 18 தேர்தலில் கண்டிப்பா மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிற படிச்ச இளைஞர்களுக்கு ஓட்டுப் போட சொல்லி பத்துபேர் கிட்டயாவது நான் சொல்லுவேன். அரசியல் மாற்றம் உடனே நடந்துடாது, அதை நாம் நடத்துவோம்”
 

“ஒரு பெரிய பிரச்சனையை பேசி அதற்கான தீர்வையும் உறியடி ஸ்டைலில் சொல்லியிருக்காங்க. அந்த கோவம் ரொம்ப சாரியாக இருந்துச்சு”
 

“சாமானிய மனிதனுடைய வலியையும் வேதனையையும் தெளிவா சொல்லியிருக்க படம். 100 சதவீதம் சரியான படம். இதைப் பார்த்துட்டு போங்க, சரியான ஆளுக்கு ஓட்டுப் போடுங்க” என்று பெரும்பாலான ரசிகர்கள் படத்தை தேர்தலுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். தொடர்ந்து யூ-ட்யூப் பிரபலம் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் படத்தைப் பற்றிக் கூறுகையில்...
 

“உறியடி 1 ஒரு ஆழமா அரசியல் பேசுனுச்சு. அதைவிட ஆழமான அரசியலை உறியடி 2 வும் பேசியிருக்கு. சர்வதேச அரசியலை ரொம்ப எளிமையாக சொல்லியிருக்கு. போராட்டம் வேண்டும் வேண்டாம்னு சொல்றவுங்க மத்தியில் ஒரு மாசுபாடு ஏற்பட்டால் மக்களோட வலி எப்படி இருக்கும் அப்படினு சொல்லியிருக்காங்க. மனம் கனத்துதான் படம் பார்க்கவேண்டியிருக்கு. இந்த படம் எப்போ வந்தாலுமே அதுக்கப்புறம் வருகிற எலெக்‌ஷனின் போது இந்தப் படத்தைப் பற்றி நினைச்சுதான் ஆகணும். தேர்தல் அரசியலையும் தாண்டி பிரச்சனைகள் எங்கயோ யாருக்கோ நடக்குதுனு நினைச்சுக்கிட்டு இருப்போம் இல்லையா, அந்த பிரச்சனை நமக்கு நம்ம வீட்டில் நடந்தா அந்த வலி எப்படி இருக்கும்னு காட்டியிருக்காங்க. படத்தால் மாற்றம் வந்துடும் என்றால் 75 வருஷத்தில் எப்பவோ மாற்றம் வந்துருக்கும். ஆனால், இந்த படம் பேசியிருக்க விஷயம் எல்லோருக்குள்ளும் ஆழமாக பதிய வேண்டிய ஒன்னு”என்றார். 
 

 

 

 

Next Story

'எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி' -  'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' நாயகி சிலிர்ப்பு 

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் சில பிரபலமான யு டியூப் நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

shirin

 

ஷபீர் இசையில் உருவாகும் இப்படத்தின் 80% பகுதிகள் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தாலும், படத்தின் முடிவில் முக்கியமான, ஒரு வலுவான கருத்தை கொண்டுள்ளது. இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகியாக நடித்துள்ள  ஷிரின் காஞ்ச்வாலா இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி மிகவும் மகிழ்ச்சியோடு பகிரும்போது....

 

 

"ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நான் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பேனரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சார் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் ஆகிய இருவருக்கும் நன்றி. மொத்த குழுவும் மிகவும் நட்புடன் பழகினர். நான் இந்த படத்தில் பணி புரிந்த ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். சிவகார்த்திகேயன், கார்த்திக் வேணுகோபாலன் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் எனக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தனர். ரியோ ராஜ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நான் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். அவர் இங்கு பல கடினமான காட்சிகளை கூட ஒரே டேக்கில் நடித்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இது எனது முதல் தமிழ் திரைப்படம். கதை அம்சம் உள்ள நல்ல பல திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.