Skip to main content

என்னை ஆந்திரா பெண் என்று நினைக்கிறார்கள் - ரெஜினா கேசன்ட்ரா

Published on 26/05/2018 | Edited on 28/05/2018
regina cassendra


தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரெஜினா கேசன்ட்ரா தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்தாக நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, மிஸ்டர் சந்திரமவுலி வெளியாகவுள்ள நிலையில் தன் அடுத்தடுத்த படங்களை பற்றி ரெஜினா கேசன்ட்ரா பேசுகையில்.... "சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பெண் நான். தமிழ் சினிமாவைவிட தெலுங்கில் நிறைய படங்கள் நடித்ததால் என்னை ஆந்திரா பெண் என்று நினைக்கிறார்கள். இப்போது தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையில் வளர்ந்த எனக்கு நல்ல தமிழ்ப் படங்கள் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை.இப்போது நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. முக்கியமாக தமிழில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நிறைய உருவாகின்றன. எனவே அதுபோன்ற பலமான வேடங்கள் வரும் என்று காத்திருக்கிறேன். மேலும் நான் அடுத்தாக  சோனம் கபூருடன் 'ஏக் லடுக்கி கோ தேக்கா தோ ஐஸா லகா' என்ற இந்தியில் படத்தில் நடிக்கிறேன்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்றனர் 

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
stunt union

 

 

தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டன்ட் இயக்குனர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன் 1966 ஆம் ஆண்டு  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு,கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கடந்து, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வரும் சங்கம் 52 வது ஆண்டு கடந்து தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சென்ற முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.S.G.சோமசுந்தரம் (எ ) S.D சுப்ரீம் சுந்தரே இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

 

திரு.தவசிராஜ். S.D          –       உபதலைவர்

திரு.K.ராஜசேகர். S.D        –      துணைத்தலைவர்

திரு.G.பொன்னுசாமி S.A    -      செயலாளர்

திரு.V.மணிகண்டன் S.A    -      துணைச்செயலாளர்

திரு.S.S.M.சுரேஷ் S.A        -      இணைச்செயலாளர்

திரு.C.P.ஜான் S.A            -       பொருளாளர்

செயற்குழு உறுபினர்கள்

திரு.S.M.ராஜ் S.A 

திரு.P.ரவிக்குமார் S.A 

திரு.R.நாராயணன் S.A 

திரு.R.பாபு S.A 

திரு.A.வெங்கடேஷன் S.A 

திரு.U.ஆனந்தகுமார் S.A 

திரு.V.காசி S.A 

திரு.M.வெற்றிவேல் S.D

திரு.M.சுகுமார் S.A

திரு.B.K.பிரபு S.D

திரு.E.பரமசிவம் S.A

திரு.K.சதாசிவம் S.A

 

மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இந்த ஆண்டின் பொறுப்பாளர்கள் ஆவார்கள். அதுமட்டுமல்லாமல் 2019 ம் ஆண்டு தேர்தலை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி M.சாகுல் அமீர் S.D அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பதவியேற்பு விழா இன்று (05.01.2019) காலை ஸ்டன்ட் யூனியனில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி.S.தாணு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர், மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், வி.பிரபாகர், சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற உருப்பினர்களுக்கு 24 சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்களும், ஸ்டன்ட் இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

 

Next Story

தெலுங்கிலும் மாஸ் காட்டிய விஷால்

Published on 09/06/2018 | Edited on 09/06/2018
vishal


அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கதில் விஷால் நடித்த 'இரும்புத்திரை' படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது. நாயகியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இப்படம் நல்ல வசூலை ஈட்டி தந்ததையடுத்து தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் இப்படத்தை டப் செய்து வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது எதிர்பார்த்தது போலவே தெலுங்கிலும் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை இப்படம் அங்கு 12 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இனிவரும் நாட்களிலும் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் கிட்டதட்ட நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகரான வசூலை விஷால் அங்கு பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.