Skip to main content

'ஆடு, மாடுகளை உங்களால் ஒரு இடத்துக்கு ஓட்டி செல்ல முடியுமா...' - பீட்டாவை வெளுத்த பாண்டிராஜ் 

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
pandiraj

 

 

 

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2D ராஜ் சேகர் பாண்டியன், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், சரவணன், சூரி, மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீமண், மனோஜ் குமார், நாயகி சயீஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா பினு, பானு ப்ரியா, மௌனிகா, ஜீவிதா, இந்துமதி, கலை இயக்குனர் வீர சமர், எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் இயக்குனர் பாண்டிராஜ் பேசியபோது... "யாரோ நான் நடிகர்களோடு கோபமாக இருப்பேன் என்ற புரளியை கிளப்பியுல்லார்கள். அது சுத்த பொய். படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள். அதை படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை.

 

 

 

பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். எங்கள் ஆடு, மாடுகளை நாங்கள் அண்ணன், தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு, மாடு மேய்த்து வந்தவன் தான். எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி கூட்டி செல்ல முடியுமா...? கண்டிப்பாக முடியாது...? அப்படி உங்களுக்கு என்ன அக்கரை எங்களுக்கு இல்லாதது...? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் ஆடுமாடுகளை. நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம். ஒரு கல்யாணவீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு சாப்டாம இருக்குமே, தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம் அவர்களை கவனிக்க. மட்டன், சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியும்" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்