Skip to main content

இந்தியாவில் முதன்முறை; புதுமையான முயற்சியில் உருவாகியுள்ள சிபிராஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

For the first time in India; innovative Sibiraj film release date Announced

 

'கபடதாரி' படத்திற்குப் பிறகு சிபிராஜ் நடித்திருக்கும் படம் 'மாயோன்'. கிஷோர் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தில் தன்யா கதாநாயகியாக நடித்துள்ளார். 'டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்' சார்பாக அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் நடக்கும் வகையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் இரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

இந்நிலையில், இப்படத்தின் ரீலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'மாயோன்' படம் ஜூன் மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய அளவில் முதல் முறையாகப் பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர்கள் படத்தை ரசிக்கும் வகையில் அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை உணரும் அனுபவத்தை வழங்கும் ஆடியோ விளக்கத்துடன் படம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளையராஜா பயோ பிக் - இயக்குநர் அறிவிப்பு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
ilaiayraaja biopic update

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகவுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகியது. கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குரூப் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் இளையாரஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கவுள்ளதாகவும் 2025ன் நடுவில் வெளியாகவுள்ளதாகவும் அப்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. 

ilaiayraaja biopic update

பின்பு சமீபத்தில் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இப்படத்தை இயக்குவார் என தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் படப் பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் இளையராஜா, கமல், தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இப்படத்தை ஏற்கெனவே தகவல் வெளியானது போல் அருண் மாதேஷ்வரன் தான் இப்படத்தை இயக்கவுள்ளார். இதன் மூலம் இரண்டாவது முறையாக அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். முன்னதாக கேப்டம் மில்லர் படத்தில் நடித்திருந்த நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றது. பின்பு மீண்டும் தனுஷை வைத்து அவரது தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டானார். ஆனால், அந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், மற்றொரு தயாரிப்பு நிறுவனத்தில் தனுஷை வைத்து இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. முன்னதாக பாலிவுட் இயக்குநர் பால்கி இளையராஜா பயோபிக்கை இயக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“பவதாரிணி பெயரில் பணம் சுருட்டிருக்காங்க” - கங்கை அமரன் பகீர் குற்றச்சாட்டு

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
gangai amaranGanga Amaran accuses dhina saying embezzled the money with the signature of Bhavadharani

தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், நேற்று நடைபெற்ற நிலையில் தலைவர் பதவிக்கு தினாவை எதிர்த்து போட்டியிட்ட சபேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே கங்கை அமரன், தீனா குறித்து பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அது தற்போது இசைத்துறையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,  “எங்க வீட்டில் ஒரு துக்க நிகழ்வு. அதனால் இளையாராஜாவால் வரமுடியவில்லை. அவர் சார்பாக நான் வந்திருக்கிறேன். இந்த யூனியன் ஆரம்பிக்கப்பட்ட போது விதியின்படி, ஒருவருக்கு 2 வருட பதவி, அதை மேலும் 2 இரண்டு வருடம் நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் 4 முறை தலைவராக இருந்த தினா அவரது அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்த 4 வருஷத்துக்கும் தலைவராக வேண்டும் என அடம்பிடிக்கிறார். 

அது போக யூனியனில் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி பண்ணுவதாக அவர்கள் பணம் வாங்கியிருக்கிறார்கள். அதில் அவர்களாக பணம் கோரும் கடிதத்தை தயார் செய்துள்ளனர். இதில் இறந்து போன பவதாரிணியின் கையெழுத்து போட்டுக் கூட பணம் எடுத்துள்ளார்கள். ஏறத்தாழ ரூ.80 லட்சத்துக்கும் மேல் சுருட்டியுள்ளனர். அந்த கணக்கெல்லாம் எங்கு தெரிந்துவிடுமோ என்பதற்காக மீண்டும் தலைவராக வர தினா முயற்சிக்கிறார்” என்றார். 

மேலும் இளையாராஜா கூறியும் தினா மறுத்துவிட்டதாக சொன்ன கங்கை அமரன், “இளையராஜா தினாவிடம் ஒரு ஆளுக்கு 4 வருஷம் தான் பதவி, நீ பண்றது சரியில்லை... என சொன்ன போது, அந்தாளு சும்மா உக்காந்து கத்திக்கிட்டு இருப்பான்... என பேசினார்” என்றார். மேலும் இளையராஜா பேசிய ஆடியோவையும் வெளியிட்டார்.