Skip to main content

வரலாற்றை மாற்றுமா சூப்பர் ஸ்டார்களின் ஆர்.சி.பி. அணி...?

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

ஐ.பி.எல். தொடரில் இன்னும் டெல்லி, பஞ்சாப், பெங்களூரு அணிகள் கோப்பையை வெல்லவில்லை. இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் கலாய்க்கப்படும் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அதற்கு காரணம் பல சூப்பர் ஸ்டார்கள் ஆர்.சி.பி. அணியில் இருந்தும் அணி வெற்றி பெறாததுதான். கோலி, கெயில், டி வில்லியர்ஸ் என பல சூப்பர் ஸ்டார்களை கொண்டிருந்தும் பெரிய வெற்றிகளை பெறவில்லை என்ற குறையை கொண்டுள்ளது ஆர்.சி.பி. இந்த ஆண்டு புதுப் பொலிவுடன் களமிறங்கவுள்ளது. 

 

rcb

 

விமர்சனங்களை வீழ்த்தி இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது பெங்களூர் அணி. கோலி - டி வில்லியர்ஸ் இணையும், சக்ஸஸ்ஃபுல் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்னும் வரலாற்றை மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஆர்.சி.பி. ரசிகர்கள் உள்ளனர். 
 

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த கோலி எனும் அசைக்க முடியாத ஆளுமை பெற்றது பெங்களூர் அணி. ஆட்டத்தின் போக்கை மாற்றி தனது பக்கம் ஆட்டத்தை கொண்டு வருவதில் கோலிக்கு ஈடு அவரே. எந்த நாட்டிற்கு சென்றாலும் "ஏ.பி.டி., ஏ.பி.டி." என்று ரசிகர்கள் உற்சாகப்படுத்தும் அளவிற்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர் பட்டாளம் கொண்டவர் டி வில்லியர்ஸ். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னரும் தனது அதிரடி ஆட்டத்தை மாற்றாமல் கலக்கி வருகிறார் டி வில்லியர்ஸ். இவர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் சிம்ரன் ஹெட்மையர் இணைந்து இருப்பது புது உற்சாகத்தை அணிக்கு தருகிறது. 

 

virat

 

உலகின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான யுவேந்திர சாஹல் நல்ல ஃபார்மில் உள்ளார். ஸ்பின் பவுலிங்கில் யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், மொயின் அலி, பவன் நெகி ஆகியோர் கொண்ட யூனிட் வலுவாக உள்ளது. ஃபாஸ்ட் பவுலிங்கில் உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, நேதன் கோல்டர் நைல், மொகமது சிராஜ், டிம் சவுதி ஆகியோர் உள்ளனர். 
 

உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களான மொயின் அலி, காலின் டி கிராண்ட் ஹோம், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோர் அதிரடி பேட்டிங்கிலும், விக்கெட் எடுக்கும் திறனும் கொண்டு அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள். மற்ற ஆல்ரவுண்டர்களான பிரயாஷ் ரே பர்மான், அக் ஷதீப் நாத், குர்கீரத் சிங், ஷிவம் துபே ஆகியோர் அணியை சமநிலைப்படுத்த உதவுவார்கள்.
 

பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன்னும், ஆஷிஸ் நெஹ்ரா துணை பயிற்சியாளராகவும் இந்த ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை விளையாடிய 11 தொடர்களில் ஆர்.சி.பி. மூன்று முறை மட்டுமே இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. அனுபவம் நிறைந்த வீரர்கள் இருந்தும் ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது ஆர்.சி.பி. அணி. 

 

ab de

 

கடந்த ஆண்டு விளையாடிய பிரன்டன் மெக்கலம், கிறிஸ் வோக்ஸ், கோரி ஆன்டர்ஸன் ஆகிய 9 வீரர்களை நீக்கி விட்டு புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சில வருடங்களாக அணியின் டாப் ஆர்டர் சிறப்பாகவும், மிடில் மற்றும் லோயர் ஆர்டர் சொதப்பியும் வந்தது. இந்த வருடம் அதை மாற்றும் வகையில் லோயர் ஆர்டர் பலமாக அமைந்துள்ளது. ஆனால் வழக்கம்போல இந்த முறையும் ஸ்பெஷலிஸ்ட் டி20 ஃபாஸ்ட் பவுலர்கள் இல்லாமல் இருப்பது அணிக்கு பலவீனமாக இருக்க வாய்ப்புண்டு.  
 

ஆர்சிபி அணியில் வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேர் மட்டுமே விளையாட முடியும் நிலையில் டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் ஒரு ஆல் ரவுண்டர், ஒரு ஃபாஸ்ட் பவுலர் மட்டுமே அணியில் விளையாட முடியும். சரியான காம்பிநேசன் இல்லாமல் எந்த இடத்தில் வீரர்கள் களமிறங்குவது என்பது அணிக்கு பலவீனமாக அமையும். மொத்தம் உள்ள 24 வீரர்களில் ஆர்.சி.பி. அணியில் 16 வீரர்கள் இந்திய வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

 

பலம்: 


வலுவான மிடில் ஆர்டர் பேட்டிங்.

லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.

அனுபவமுள்ள ஆல்ரவுண்டர்கள். 

 

பலவீனம்:


ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனிங் இணை இல்லாதது.

டி-20 க்கு ஏற்ற இந்திய ஃபாஸ்ட் பவுலர் இல்லாதது.
 


பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள்: 


விராட் கோலி(கேப்டன்), டி வில்லியர்ஸ், பார்த்தீவ் படேல், யுவேந்திர சாஹல், சிம்ரன் ஹெட்மையர், மொயின் அலி, காலின் டி கிராண்ட் ஹோம், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஷிவம் துபே,   ஹென்ரிச் கிளாசன்,  உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, நேதன் கோல்டர் நைல், மொகமது சிராஜ், டிம் சவுதி, வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, மிலிந்த் குமார், ஹிமாத் சிங், பிரயாஷ் ரே பர்மான், அக் ஷ்தீப் நாத், குர்கீரத் சிங், தேவ்தத் படிக்கல், கேஜ்ரோலியா.

 

 

 

 

Next Story

வீறு கொண்டு எழுந்த விராட்; பஞ்சாப்பை திணறடித்த தினேஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
rcb vs pbks ipl live score updated kohli dinesh creates the magic

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கினார் கோலி. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பட்டிதார் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த அனுஜ் ராவத் ஓரளவு நிதானம் காட்ட மறுபக்கம் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக ஆர்சிபி அணிக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இம்பாக்ட் வீரராக தயாலுக்கு பதிலாக மகிபால் லொம்ரோர் களமிறங்கினார். வந்தவுடன் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கும் அதிரடியைத் தொடங்கினார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லொம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ப்ரார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், சென்னை, குஜராத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உள்ளன.

Next Story

CSK vs RCB: ராவத் - தினேஷ் இணை அதிரடியால் பெங்களூரு ரன்கள் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
CSK vs RCB ipl latest live score update

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 17 வது சீசன் ஐபிஎல் தொடர் ஆனது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐபிஎல் தொடக்க விழாவானது ஏ. ஆர். ரகுமான் அவர்களின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மேலும் இந்த தொடக்க விழாவில் இந்தி பாடகர் சோனு நிகம் மற்றும் இந்தி நடிகர் அக்ஷய் குமார் டைகர் ஷெராப் உள்ளிட்டோர் ஏ. ஆர். ரகுமான் துள்ளல் இசைக்கு நடனமாடி ரசிகர்களை மகிழச் செய்தனர்.

தொடக்க விழா முடிந்த பின்பு முதல் ஆட்டம் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டூப்ளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆர். சி. பி அணிக்கு கோலி மற்றும் டூப்ளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டூ ப்ளசிஸ் அதிரடி காட்ட, கோலி நிதானம் காட்டினார். சிறப்பாக ஆடிய டூப்ளசிஸ் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.  அடுத்து வந்த, கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராஜட் பட்டிதார் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.  இவர்கள் இருவரின் விக்கெட்டையும் முஷ்டபிசுர் ரஹ்மான் அடுத்து அடுத்து எடுத்தார்.

அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்மெல்லும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்பு வந்த கேமரூன் கிரீன் மற்றும் கோலி இணை ஓரளவு பொறுமையாக ஆடியது.  கோலி 21 ரன்களுக்கும்,  கேமரூன் க்ரீன் 18 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டத்தில் கோலி 6 ரன்களை எடுத்தபோது டி20 கிரிக்கெட் 12000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ராவத் இணை சிறப்பாக ஆடியது. அதிரடி காட்டிய இருவரும் பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் அனுப்பிய வண்ணம் இருந்தனர்.  மிகச் சிறப்பாக ஆடிய ராவத் , தேஷ்பாண்டே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டார். தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினார். ராவத்  48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முஷ்டபிசுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.