Skip to main content

"இது அவர்களுக்கும் தெரியும்... எதையும் அவர்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" - ஆடுகளம் குறித்து புஜாரா கருத்து!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

pujara

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தநிலையில், இந்திய டெஸ்ட் அணியின் வீரர் புஜாரா இந்த இறுதிப்போட்டி குறித்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலிலளித்துள்ள புஜாரா, "இப்போது டெஸ்ட் கிரிக்கெட் என்று வரும்போது விளையாடுதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. டெஸ்ட் மட்டுமே விளையாடுவோருக்கு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவது பெரிய விஷயமாகும். மேலும், அணியில் உள்ள அனைவருக்கும் இது பெரிய விஷயமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டின் மதிப்பையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். மற்ற ஒருநாள் மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பைகளின் இறுதிப்போட்டிகளைப்  போலவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் பெரியது" என கூறியுள்ளார்.

 

இங்கிலாந்தில் தற்போது போட்டி நடைபெறுவது நியூசிலாந்திற்கு சாதகமானதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த புஜாரா, "இறுதிப் போட்டியில், சிறப்பாக விளையாடும் அணி, ஐந்து நாட்களும் அதன் திறனுக்கு ஏற்றவாறு விளையாட உறுதிப்பூண்டுள்ள அணி கோப்பையை வெல்லும் . எனவே, ஒரு அணியை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக நான் பார்க்கவில்லை. போட்டி நடுநிலையான இடத்தில் விளையாடப்படுகிறது. இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும். எங்களிடம் தரமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு உள்ளது" என் தெரிவித்தார்.

 

இந்தியாவிடம் வலுவான பந்துவீச்சு இருப்பதால்தான் புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் போட்டிகளை நடத்த எதிரணிகள் விரும்புவதில்லையா எனவும் புஜாராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "தாங்கள் புற்கள் நிறைந்த பிட்ச்சைக் கொடுத்தால், தங்களின் பேட்டிங் வரிசையும் சோதிக்கப்படும் என்பது தற்போது அணிகளுக்குத் தெரியும். அவர்களால் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த நாட்களில் பெரும்பாலான அணிகள் பந்து வீச்சாளர்களுக்குப் போதுமான அளவு கைகொடுக்கும் நியாயமான ஆடுகளத்தைத் தேர்வு செய்கின்றன. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கும் அது சாதகமாக இருக்க வேண்டும்" என கூறியுள்ளார். 

 

 

Next Story

எல்லோருக்கும் 100%.. கில்லுக்கு மட்டும் 115%.. அபராதம் விதித்த ஐசிசி

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

100% for all.. 115% for Subaman Gill.. fined by ICC

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் போலண்ட் வீசிய 8 ஆவது ஓவரில் கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். க்ரீன் தனது இடது கையால் பந்தை பிடித்தாலும் பந்து தரையில் பட்டது போல் காணப்பட்டது. கள நடுவர் மேல்முறையீட்டிற்கு செல்ல மூன்றாம் நடுவர் அவுட் என முடிவு வழங்கினார். இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

 

கடந்த 10 ஆம் தேதி சுப்மன் கில் தனது ட்விட்டர் பதிவில் க்ரீன் பந்தை பிடித்த காட்சியை பதிவிட்டு விமர்சனம் செய்திருந்தார். அதில் பூதக்கண்ணாடியையும் தலையில் அடித்துக் கொள்ளும்படியான எமோஜியையும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடுவரின் முடிவை விமர்சனம் செய்ததாக சுப்மன் கில்லுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதமும் ஆஸ்திரேலிய அணிக்கு 80% அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் சுப்மன் கில்லுக்கு 115% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

“ஒன்றை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” - சச்சின் ஆதங்கம்

Published on 11/06/2023 | Edited on 12/06/2023

 

Sachin Tendulkar on India's defeat in World Test Championship

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

 

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து ட்விட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். போட்டியை தங்களுக்கு சாதகமாக அமைக்க ஆட்டத்தின் முதல் நாளிலேயே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் இணைந்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இந்திய அணி ஆட்டத்தில் நிலைத்திருக்க முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியவில்லை. இந்திய அணிக்கு சில நல்ல தருணங்கள் இருந்தன. அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரான அஸ்வினை பிளேயிங் லெவனில் ஏன் எடுக்கவில்லை? இதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

 

நான் போட்டிக்கு முன்பே சொல்லி இருந்ததன் படி, திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் டர்னிங் டிராக்குகளை நம்பியிருக்க மாட்டார்கள். அவர்கள் காற்றில் பந்தை திருப்பியும், ஆடுகளத்தின் மேற்பரப்பிலிருந்து பவுன்சரை எடுத்து வந்து மாறுபட்ட பந்துகளை வீசுவார்கள். ஆஸ்திரேலிய அணியின் டாப் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடதுகை வீரர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.