Skip to main content

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாதனை வெற்றி!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

ipl match punjab team vs rajasthan team match

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 224 ரன்கள் இலக்கைக் கடந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ரன் இலக்கை 6 விக்கெட்டுகளை இழந்து 19.3 ஓவரில் எட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாதனை வெற்றிப் பெற்றுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிக ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்தது இதுவே முதல்முறையாகும்.

ipl match punjab team vs rajasthan team match

முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 106, கே.எல்.ராகுல் 69, பூரன் 25 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சஞ்சு சாம்சன் 85 ரன்கள், ஸ்மித், திவாதியா அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினர். 

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. துபாயில் இன்று (28/09/2020) இரவு 07.30 மணிக்கு இரு அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.