Skip to main content

சென்னையா, ஹைதராபாத்தா யாருக்கு கோப்பை, வீரர்களின் நிலை என்ன???

Published on 26/05/2018 | Edited on 27/05/2018

ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி ஆரம்பித்தது, அந்தத் தொடரின் கடைசி போட்டியான கிராண்ட் பைனல் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது. அதுவும் இந்த ஆண்டின் சிறந்த அணிகளாக திகழும் இரு அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி இது. இந்த ஆண்டின் சிறந்த சேஸ் செய்யும் அணிக்கும், சிறந்த பந்துவீசும் அணிக்கும் இடையே நடக்கும் போராக இன்றைய ஆட்டம் இருக்கும். பதினோராம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை இன்று யார் வெல்லப் போகிறார்கள் என்று இன்றிரவுதான் தெரியும், ஆனால் கண்டிப்பாக 100 சதவீத பொழுதுபோக்குக்கு கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நடக்க இருக்கும் பைனலை பற்றிய ஒரு சின்ன அலசலை பார்ப்போம்.
 

csk vs srh

 

 

 

கேன் வில்லியம்சன்  vs லுங்கி இங்கிடி 
இந்த வருடத்திற்கான போட்டித் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் என்று கேன் வில்லியம்சன்னை சொல்லிவிடலாம். ஆரஞ்சு தொப்பியும் அவர் வசமே இருக்கிறது. இந்த பதினோராவது ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை பெற்று முதலிடத்தில் இருக்கும் வீரர் அவர். இதுவரை 688 ரன்கள் பெற்றிருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் சிறந்த பந்துவீச்சாளராக பார்மில் இருக்கும் லுங்கி இங்கிடியை சமாளித்து ஆட வேண்டும். இல்லை என்றால் தொடக்கத்தில் சிரமம் ஏற்படும். இந்த உயர்ந்த தென் ஆப்ரிக்க வீரர் சிஎஸ்கே கண்டெடுத்த முத்து. ஆறு போட்டிகளில் பத்து விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே ஒரு ரிதத்துடன் பந்து வீசினாரென்றால் கண்டிப்பாக எஸ்.ஆர்.எச். வீரர்கள் அதிகளவு சிரமத்தை எதிர் நோக்குவர்.


ரஷீத் கான் vs  எம்.எஸ். தோனி
களத்தில் இந்த இருவருக்குமான போட்டி என்பது கண்டிப்பாக பார்ப்பவர்களை வாய் பிளக்க வைக்கும். கடைசியாக இவ்விருவரும் சந்தித்துக்கொண்ட குவாலிபையர் முதல் சுற்றில் ஆப்கான் சுழற்பந்து வீச்சாளருக்கே வெற்றி கிடைத்தது. தோனி, லெக் ஸ்பின்னில் வீக் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆதனால் அவரை சமாளிக்க ரஷித்தையே ஆயுதமாக பயன்படுத்துவார்கள். எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அணியுடன் வெற்றிபெற காரணமாக இருந்தவரும் இவரே. ஆகையால் அந்த ஒரு எனர்ஜியும் இருக்கக்கூடும். 
 

 

 

தீபக் சாஹர் vs ஷிகர் தவான் 
தீபக் சாஹர், சிஎஸ்கேவின் நியூபால் பவுலராக இருக்கிறார். இரண்டு ஸ்விங்குகளும் போடுவதால், தொடக்கத்தில் இவரது பந்துகளை அடிப்பது, கொஞ்சம் கடினமாகவே இருக்கும். கடந்த போட்டியில் கூட தவானை முதல் பந்திலேயே போல்டாக்கினார்.
தவான் அவரது அணிக்கான நல்ல அடித்தளத்தை அமைக்கவில்லையென்றால் கண்டிப்பாக அவர்களால் நல்ல ஸ்கோரை டார்கெட்டாக வைக்க முடியாது. தீபக் 11 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். தவான் 15 போட்டிகளில் 471 ரன்கள் அடித்திருக்கிறார்.
 

csk playing

 

அம்பத்தி ராயுடு vs ஷாகிப் அல் ஹசன்
ராயுடு, முன்னாள் சாம்பியன்களிடம் இருந்து சென்னை அணிக்கு தாரைவார்க்க பட்ட வீரர். யாரும் எதிர்பார்க்காத வகையில் தோனி அவரை தொடக்க வீரராக களம் இறக்கினார். அதற்கு கிடைத்த பதில்தான் அவரது ஸ்கோர் 586 ரன்கள். இதில் ஒரு சென்ச்சூரியும், இரண்டு ஆப் சென்ச்சூரியும் அடக்கம்.
ஷாகிப் அவருடைய வேலையான ஆல் ரவுண்டர் வேலையை சரியாக செய்துகொண்டிருக்கிறார். ரன்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது அதை கண்ட்ரோல் செய்வதும் இவரே, பேட்டிங்கில் யாரும் அடிக்கவில்லையென்றால் ரன்களை வேகமாக சேர்ப்பதும் இவரே ஆகமொத்தத்தில் இவர் நல்ல ஃபார்மில் ஆடுகிறார்.
 

புவனேஷ் குமார், சித்தார்த் கவுல் vs  ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா 
வாட்சன் தோனி இவர்களுடன் ஆடும் போது, நன்றாகவே ஆடி வருகிறார், நல்ல தொடக்கத்தை ஏற்படுத்துகிறார் ரெய்னா. தொடக்கம் சரியாக இல்லை என்றால் அவர் உள்ளே வந்து நிலையாக நின்று நல்ல ஸ்கோர்கள் பெற்றுத்தர உதவியாக இருக்கிறார்.
 

 

 

புவனேஷ்வர் குமார் இந்த ஆண்டு 9 விக்கெட்டுகளையே எடுத்து இருக்கிறார் என்றாலும், அவருடைய கடைசி ஓவர்களும், அதிக ரன்கள் தராத பவுலிங்கும் ஆட்டத்திற்கு உதவுகிறது. கவுல், இந்த வருடம் அவருக்கானது என்றே சொல்லலாம். 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் இதுவரை எடுத்திருக்கிறார். கடைசியாக நடந்த சிஎஸ்கே மேட்சில் கூட சிஎஸ்கே ரன்கள் சேர்ப்பதை சிரமத்திற்குள்ளாகியதும் இவர்தான். 

இன்றைய ஆட்டம் நகங்களை கடித்துக்கொண்டு... ஏன், டிவிக்குள் தலையைவிட்டு பார்க்கும் அளவிற்குகூட சுவாரசியமாக இருக்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.