Skip to main content

"15 நாள்ல விட்டுட்டு வந்தேன்; இப்போ 4 மாசம் ஆகுது" -உருகும் ஹர்திக் பாண்டியா

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
hardhik

 

 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இருபது ஓவர் போட்டித்  தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. முதலாவது இருபது போட்டியில் இந்திய அணி வெற்றபெற்ற நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய வென்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.

 

அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெற வைத்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஹர்திக் பாண்டியவிடம், குழந்தை பிறந்த பிறகு உங்கள் வாழ்க்கை மாறிவிட்டதா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா, அது ஒரு வித்தியாசமான அனுபவம் என குறிப்பிட்டார்.

 

இதுகுறித்து அவர் கூறியதாவது, "குழந்தை பிறந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். குழந்தை பிறந்ததும் நீங்கள் அமைதியாகிவிடுவீர்கள். மேலும் வாழ்க்கையை வேறுவிதமாக பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். குழந்தை பிறந்த பிறகு, எனது குடும்பத்தை பற்றிய எனது பார்வை மாறியிருக்கிறது என நினைக்கிறேன். நானும் மாறியிருக்கிறேன். நான் இப்போது அவனை பிரிந்திருப்பதை உணர்கிறேன். அவனை பார்ப்பதற்காக, இங்கிருந்து கிளம்ப காத்துக்கொண்டிருக்கிறேன். அவன் 15 நாள் குழந்தையாக இருக்கும்போது அவனை பிரிந்து வந்தேன். இப்போது அவன் 4 மாத குழந்தையாகியிருப்பான்" என உருக்கமாக கூறினார்.