Skip to main content

சி.எஸ்.கே அணியின் சாம்பியன் வீரர் திடீர் ஓய்வு!!!

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
bravo


மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்தவர் டுவேயின் ப்ராவோ. இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிப்படுத்தியவர். அதேபோல, இவரின் கிரிக்கெட் ஆட்டத்திற்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ, அதேபோல மைதானத்தில் விக்கெட் எடுத்துவிட்டு இவர் போடும் அட்டத்திற்கும் அதிக அளவிலான ரசிகர்கள் உண்டு. இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு என்று தமிழக ரசிகர்கள் பலரும் உள்ளனர். 
 

கடந்த 2004 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக முதன் முதலாக விளையாடினார். இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 2968 ரன்களையும், 199 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். டி20யில் 1142 ரன்களையும், 52 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ”சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்று தீர்மானித்துள்ளேன். 14 வருடம் கழித்தும் நான் முதன் முறையாக மெரூன் கேப்பை இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் அணிந்தது என் நினைவில் இருக்கிறது. அன்று கிடைத்த உத்வேகம் மற்றும் உற்சாகம், என் வாழ்நாள் முழுவதும் இருந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Next Story

“வெளியேறும் நேரம் வந்துவிட்டது..” - டுவைன் பிராவோ

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

"It's time to leave." -   Bravo

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழாவது உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், பன்னிரண்டு அணிகள் இரு குழுக்களாக விளையாடிவருகின்றன. இதில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும். இதில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் சரியாக விளையாடாததால், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. நேற்று (04.11.2021) நடைபெற்ற இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ தனது ஓய்வை அறிவித்துள்ளார். 

 

ஆஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது. இது பிராவோவுக்கு இறுதி போட்டியாக இருக்கும். ஓய்வு குறித்து தெரிவித்துள்ள பிராவோ, "கடந்த 18 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடியுள்ளேன். அதில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளேன். தற்போது வெளியேறும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

சென்னை அணிக்கு கூடுதல் பின்னடைவு!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

bravo

 

 

சென்னை அணியின் முன்னணி வீரரான பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளது, சென்னை அணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்விகளால் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனி எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வென்றாலும், பிற அணிகளின் வெற்றி, தோல்விகளை அடிப்படியாக வைத்தே சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும். தரவரிசைப்பட்டியலில் முன்னணியில் உள்ள பிற அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறிய பிராவோ, மீண்டும் களமிறங்கவில்லை. தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிராவோ முழுமையாக விலகியுள்ளதாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.