Skip to main content

சென்னை ரசிகர்கள்தான் மிகச்சிறந்தவர்கள் - அபிஷேக் பச்சன் பெருமிதம்...

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

எந்த விளையாட்டாக இருந்தாலும் எப்போதுமே சென்னை ரசிகர்கள் தான் சிறந்தவர்கள் என அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

 

abisheik bachchan about chennai fans

 

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் சென்னையின் எஃப்சி கால்பந்து அணியினர் ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையின் எஃப்சி அணியை தோனியுடன் சேர்ந்து வாங்கினார் அபிஷேக் பச்சன்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அபிஷேக் பச்சன், "சென்னை எனக்கு இரண்டாம் வீடு என்றும், குழந்தை பருவத்தை சென்னையில் தான் நாம் அதிகமாக செலவழித்தேன். அதுபோல சென்னை அணியை நிர்வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விளையாட்டுகளில் ஊக்கமளிப்பதில் எப்போதுமே சென்னை ரசிகர்கள் தான் சிறந்தவர்கள்" என கூறினார்.

அவர் இப்படி கூறியதும் அந்த அரங்கமே கைத்தட்டல்களால் நிரம்பியது. 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எல் தொடரில் இந்த ஆண்டுக்கான கோப்பையை பெங்களூரு அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.