Skip to main content

பேட்டிங்கில் 360 டிகிரி, ஃபில்டிங்கில் சூப்பர் மேன் -ஏ.பி. டிவில்லியர்ஸ் பிடித்த அற்புதமான கேட்ச் 

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

பேட்டிங்கில் நான் 360 டிகிரி என்றால், ஃபில்டிங்கில் நான் சூப்பர் மேன் என்று ஏ.பி. டிவில்லியர்ஸ் நிரூபித்துள்ளார்.  11வது  ஐ.பி.எல் போட்டியின்  51 வது போட்டியில்  ராயல்  சேலஞ்சர்ஸ் பெங்களூரும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தும்  நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பெங்களூர் அணியை  பேட்டிங் செய்யும்படி அழைத்தது. முதலில் ஆடிய பெங்களூரு அணி இருபது ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்களை இழந்தது. பெங்களூர் அணியின் சார்பாக  ஏ.பி.டிவில்லியர்ஸ், மொயின் அலி, கொலின் கிராண்ட் ஹோம் ஆகியோர் அதிரடியாக ஆடினர். 

a.b.de villiers amazing catch

 

 

அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், அலெக்ஸ் ஹேல்ஸும் இறங்கினர். தவான் 18 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் அவரிடமே  கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். எட்டாவது ஓவரில்தான் அந்த அற்புதமான கேட்சை  ஏ.பி. டி பிடித்தார்.   எட்டாவது ஓவரின் கடைசி பந்தை மொயின் அலி வீச அந்த பந்தை ஹேல்ஸ் சிக்ஸ்க்கு அனுப்பினார். அனைவரும் சிக்ஸ் என்று நினைத்தபோது சூப்பர் மேனும், ஸ்பைடர் மேனும் இணைந்து ஓர் உடலுக்குள் புகுந்ததுபோல பறந்து கேட்ச் பிடித்தார் மிஸ்டர் 360. இந்த கேட்ச் அங்கிருந்த ரசிகர்களையும் இரு அணி வீரர்களையும் வாயைப்பிளக்க வைத்தது. இதுவரை நடைபெற்ற அனைத்து  ஐ.பி.எல் போட்டிகளிலும்  பிடிக்கப்பட்ட கேட்சுகளில் இது முதன்மையானது என்று புகழ்ந்து வருகின்றனர்.

Next Story

போராடித் தோற்ற மும்பை இந்தியன்ஸ்; முதல் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sun risers won the match ipl live score update mi vs srh

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிளாசனும் தன் பங்கிற்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன்  34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில்  42 ரன்கள் எடுத்தார்.

இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்பு கெயில் 175 அடித்த  அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தது.

அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தனர். இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்தார். ரோஹித் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. இருவரும் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் பாண்டியாவுடன் டிம் டேவிட் இணைந்தார். கேப்டன் பாண்டியா முதலிரண்டு பந்துகளில் அதிரடி காட்டி பின்னர் ரன் எடுக்க திணறினார். ஆனால் டிம் டேவிட் ஓரளவு அதிரடி காட்டி 42 ரன்கள் எடுத்தார். முதல் முறையாக களமிறங்கிய ஷெபெர்டு 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அடித்த 246 ரன்களும் சேர்த்து ஒரு டி20 இல் இரு அணிகளும் சேர்த்து அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Next Story

ப்ராவோவை சமன் செய்யும் சஹால்; ஹைதராபாத் போராடி வெற்றி

Published on 07/05/2023 | Edited on 08/05/2023

 

Chahal equalizing Bravo; Hyderabad fought back and won

 

16 ஆவது ஐபிஎல் போட்டித் தொடரின் 52 ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 214 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 95 ரன்களையும் சாம்சன் 66 ரன்களையும் குவித்தனர். ராஜஸ்தான் அணியில் புவனேஷ்வர் குமார், மேக்ரோ ஜெனசன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 55 ரன்களையும் ராகுல் திரிபாதி 47 ரன்களையும் அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் சாஹல் 4 விக்கெட்களையும் அஷ்வின், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக க்ளென் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இவர் 7 பந்துகளில் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

 

ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் கடைசி 4 போட்டிகளில் 124(64), 35(28), 54(22), 95(59) என 308 ரன்களைக் குவித்துள்ளார். இன்றைய போட்டியில் சாம்சன் மற்றும் பட்லர் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 138 ரன்களை சேர்த்துள்ளனர். இது ராஜஸ்தான் அணியின் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். முன்னதாக 2021 ஆம் ஆண்டு பட்லர் மற்றும் சாம்சன் இணைந்து 150 ரன்களைக் குவித்ததே அதிகபட்சமாகும். 

 

இன்றைய போட்டியில் ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாஹல் 183 விக்கெட்களை வீழ்த்தி ப்ராவோ உடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 174 விக்கெட்களுடன் சாவ்லா இரண்டாவது இடத்தில் உள்ளார்.