Skip to main content

சுய சிந்தனை வளர வேண்டுமா இதோ 3 சீட்.......

Published on 04/02/2019 | Edited on 09/02/2019

நம்மில் பெரும்பாலோனோர் எதற்கு எடுத்தாலும் அடுத்தவரிடம் யோசனைக் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் .அப்படி அடிக்கடி யோசனைக் கேட்பதால் அவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் குறைந்து விடுகிறது .அதுமட்டுமில்லாமல் தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது .முன்னேற்றம் என்பது சுயமாக இருக்க வேண்டும். அதாவது சொந்தமாக யோசிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும். அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். தப்பில்லை. ஆனால் அதனை அப்படியே ஜெராக்ஸ் காப்பி போலக் கடைப்பிடித்தல் கூடாது. அந்த ஆலோசனைகளை உங்கள் மனதில் ஊறப்போட வேண்டும். அதில் எதை எடுத்துக் கொள்ளலாம், எதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று யோசிக்க வேண்டும். சில யோசனைகள் உங்கள் வாழ்க்கைக்கும், உங்கள் மனோ நிலைக்கும், உங்கள் நடவடிக்கைக்கும், உங்கள் பழகும் விதத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும். அவற்றைத் துணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.வேறு சில யோசனைகள் நல்லதாகவும், கடைப்பிடிக்க வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனாலும் உங்கள் மனோபாவத்திற்கு பொருந்தாததாக இருக்கும். எனவே அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

உங்கள் வலது பாதத்தை முன்னோக்கி வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் சொந்த யோசனைப்படியே இருக்க வேண்டும்.  வயதில் பெரியவர் சொன்னால், அனுபவத்தில் சிறந்தவர் சொன்னார், அறிவில் சிறந்தவர் சொன்னார் என்றெல்லாம் கூறி, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு, எந்தவொரு அடியையும் எடுத்து வைக்கக் கூடாது. சிலர் வாகனங்களை ஓட்டும்போது ஹாரன் அடிக்கவே மாட்டார்கள். அடிக்கடி அடித்தால் பேட்டரி தளர்ந்து போய்விடும் என்பதுதான் அதற்குக் காரணம். அப்படித்தான் சிலர் தங்கள் மூளையையும் அதிகமாகப் பயன்படுத்தவே மாட்டார்கள். அவ்வாறு செய்தால் உடம்பில் எந்த பேட்டரி தளர்ந்து போகும்?
 

decision making



தீட்டத் தீட்டத்தான் வைரம் மிளிரும். அதேபோல பயன்படுத்த பயன்படுத்தத்தான் உங்கள் மூளையும் சிறப்பாக இயங்கும். இப்போது எங்கோ படித்த குட்டிக்கதை ஒன்று நினைவிற்கு வருகிறது.நிறுவனம் ஒன்றில் உயரதிகாரி பதவியில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் அன்று பொறுப்பேற்க வந்தார். ஏற்கெனவே அந்தப் பொறுப்பில் இருந்தவர் வேறொரு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்து செல்ல இருந்தார். அவரிடம் புதிதாகப் பொறுப்பேற்க இருந்தவர், திறமையான நிர்வாகம் செய்திட ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.பழைய அதிகாரியோ மூன்று சீட்டுக்களை மடித்து அவரிடம் கொடுத்து, பிரச்சனைகள் வரும்போது வரிசைப்படி ஒவ்வொரு சீட்டாகப் பிரித்துப் பார்க்கச் சொன்னார்.மகிழ்ச்சியுடன் அந்தச் சீட்டுக்களை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டார் அவர்.நிறுவனத்தின் உயரதிகாரியாகப் பொறுப்பேற்று ஒருசில மாதங்களே கடந்த நிலையில் ஊழியர்கள் மத்தியில் ஏதோ ஒரு பிரச்சனை வெடித்தது. நெருக்கடி அதிகமானது இவருக்கு.அப்போது பழைய அதிகாரி கொடுத்திருந்த சீட்டு நினைவுக்கு வந்தது. அதில் முதல் சீட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்.‘நான் இந்த நிறுவனத்திற்குப் புதியவன். எனவே சிறிது அவகாசம் கொடுக்கவும்’ என்று எழுதப்பட்டிருந்தது.ஊழியர்களிடம் அப்படியே கூறினார் அதிகாரி. அவர்களும், ‘இவர் சொல்வதும் உண்மைதான். சில மாதங்கள் பொறுத்திருப்போம்’ என்று கலைந்து சென்றுவிட்டனர்.ஒரு ஆண்டு கடந்த நிலையில் மீண்டும் ஊழியர்களின் பிரச்சனை தலை தூக்கியது. இவருக்கு அது பெரும் தலைவலியானது. எனவே இரண்டாவது சீட்டைப் பிரித்துப் பார்த்தார்.‘முன்பு உயரதிகாரிகளாய் இருந்தவர்களைக் குறை சொல்லி அவர்கள் மீது பழியைப் போடு’ என்று எழுதப்பட்டிருந்தது.இதைப் படித்ததும் ரொம்பவும் உற்சாகம் அடைந்தார். ஊழியர் களிடம் அப்படியே பழைய அதிகாரிகள் ஒழுங்காக நிர்வாகம் செய்யா மல் போனதுதான் இவ்வளவுக்கும் காரணம் என்றும், இன்னும் கால அவகாசம் தந்தால் அனைத்தையும் சீர்செய்துவிடுவேன் என்றும் கூறினார்.ஊழியர்களும் அவரது கூற்றை ஏற்றுக்கொண்டனர். எனவே இன்னும் சிறிது காலம் அவகாசம் கொடுக்க இசைந்தனர்.
 

self decision



அப்படியே இன்னும் ஒரு ஆண்டு கடந்தது. இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஊழியர்கள் மீண்டும் ‘வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை’யாக பிரச்சனையைக் கையில் எடுத்தனர்.உடனே பரபரப்பாக மூன்றாவது சீட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். அதில், ‘உனக்கு அடுத்து வருபவர்களுக்காக இதேபோல மூன்று சீட்டுக்களைத் தயார் செய்து வை’ என்று எழுதப்பட்டிருந்தது.ஒரு நிர்வாகத்தைப் பொறுப்பாக நடத்துகிறவர் தனது மூளை யைக் கசக்கி யோசிக்காமல், தனது அறிவை மழுங்கச் செய்யாமல், சுயமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.அவ்வாறின்றி யாரோ கூறியதை அப்படியே கடைப்பிடித்தால் அவர்களது நிலை சிறிது காலத்திற்கு மட்டுமே பிரச்சனைகள் இல்லாமல் போகும். அப்புறம் கிடுகிடு பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்கவே முடியாதநிலை வந்துவிடும்.எனவே மனிதர்கள் ஒவ்வொருவரும் சுயமாக சிந்திக்கப் பழக வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும்  அவர்களே தீர்மானிக்க வேண்டும். அதுவே அவர்களின் முன்னேற்றத் திற்கு உறுதுணையாக இருக்கும்.

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்