Skip to main content

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Dr Suganthan | Cold | Dry Cough |

 

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

 

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

 

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும். 

 

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமான உடல்நிலைக்கு வரலாம்.

 

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும். 

 

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.

 

 

 

 

Next Story

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு பிரச்சனையா?  -  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் ஹெல்த் டிப்ஸ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Dr Suganthan | Digestion tips

 

தீபாவளி தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட்டு வயிறு மந்தமாகவே இருந்தால் பின்வருகிற டிப்ஸை பின்பற்றி சரி செய்து கொள்ளலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன்

 

தீபாவளிக்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளித்திருப்போம். இப்போதைய பருவ கால மாற்றத்தால் இதில் உங்களுக்கு சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது. மழை காலம் என்பதால் சுடுதண்ணீர் வைத்து குளிப்பது நல்லது. மேலும் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் ராஸ்னாதி சூரணம் வாங்கி உச்சந்தலையில் வைத்தால் நல்லது. மேலும், கற்பூராதி தைலம் என்று கிடைக்கும். அதை வாங்கி தேய்த்து வருவதாலும் தலைவலி, சளி பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு மந்தமாக இருந்தால் ஓமம் சிறிதளவு எடுத்துக்கொண்டு, சுடுதண்ணியில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். வயிறு மந்தத்தால் வாந்தி எடுக்க முயன்றால், இதை குடிக்க வேண்டும். அப்போது இது சரியாகும். 

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு மலச்சிக்கல் ஏற்பட்டால் ஓமம், சீரகம், இந்து உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு சுடுதண்ணீரில் கலந்து குடித்தால், காலையில் சிக்கல் சரியாகிவிடும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளி தீனியால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.

 

கடையில் தீபாவளி லேகியம் என்றே வைத்திருப்பார்கள். அவையெல்லாம் இது போன்ற வீட்டில் கிடைக்கும் மளிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவையே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.   

 

 

 

Next Story

ஆட்டிசம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Dr SUGANTHAN Autism child food

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய உணவுகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்

 

நாம் சந்தோஷமாக இருக்கும்போது நம்முடைய உடலில் செரடோனின் என்கிற ஹார்மோன் வேலை செய்யும். சோகமாக இருக்கும்போது வேலை செய்யாது. குழந்தைகளுக்கு செரடோனின் வேலை செய்வதற்கு அவர்களுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளுக்கு அது நிச்சயம் புரியும். அவர்களோடு நீங்கள் விளையாடும்போது அவர்களும் உங்களோடு விளையாட முயற்சிப்பார்கள். அவர்களுடைய சகோதரர்களுடன் அவர்கள் பழகும்போது, தாங்களும் சகோதரர்கள் போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள்.

 

உணவில் மீன் வகைகளை அவர்களுக்கு நாம் கொடுக்கலாம். நிறைய பழங்கள் தர வேண்டும். அவர்களுக்கு வாழைப்பழம் கொடுக்கக் கூடாது. மைதா சம்பந்தப்பட்ட உணவுகளை நிச்சயம் அவர்களுக்கு வழங்கக் கூடாது. மைதாவால் இந்தக் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அந்த நேரங்களில் அவர்கள் கத்துவார்கள், என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பார்கள். பிஸ்கட்டுகளிலும் கிரீம் சேர்த்த பிஸ்கட்டுகளைக் கொடுக்க வேண்டாம். சிறுதானிய வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்கலாம்.

 

அவல் வகைகளை அவர்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் செரிமானம் எளிதாக நடக்கும். இரவு 8 மணிக்குள் அவர்களுக்கு உணவை வழங்கிட வேண்டும். உணவில் அவர்களுக்கு பழங்கள், காய்கறிகளை நிச்சயம் சேர்க்க வேண்டும். சோயா சேர்க்கக் கூடாது. மதிய உணவில் நிறைய காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 நிறைந்த உணவுகளை நிறைய கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவில் நிச்சயம் மோர் சேர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சத்துக்கள் நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.

 

நல்ல உணவு கொடுப்பதன் மூலம் அந்தக் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் விரைவாக நடக்கும். கலர் சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். சாக்லேட்டுகளை அவர்களுக்கு நிறைய வழங்கக் கூடாது. ஐஸ்கிரீம்களையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். செயற்கையான, கெமிக்கல்கள் நிறைந்த உணவுகளை அந்தக் குழந்தைகளுக்கு வழங்குவது தவறு. எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளையே அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.