Skip to main content

அனீமியா நோய் பெண்களுக்கு மட்டும்தான் வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Does  anemia  occur only in women? - Explained by Dr. Arunachalam

 

அனீமியா நோய் குறித்த பல்வேறு தகவல்களை டாக்டர் அருணாச்சலம் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

 

பெண்களில் பத்தில் ஐந்து பேருக்கு அனீமியா நோய் இருக்கிறது என்கிறது புள்ளிவிவரம். அடிக்கடி இரத்தப் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. குழந்தை வயதில் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் அனீமியா நோய் என்பது உயிருக்கே ஆபத்தாகக் கூட முடியும். இந்த நோய் இருப்பவர்களின் கை முழுக்க வெள்ளையாக இருக்கும். கண்கள் மற்றும் நாக்கிலும் இதற்கான அறிகுறிகள் தெரியும். எந்தப் பரிசோதனைகளும் செய்யாமல் இருப்பவர்கள் கண்டிப்பாக இரத்தசோகை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை இந்தப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

 

முன்கூட்டியே குழந்தை பிறப்பதற்கு இந்த நோயும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்களை விடப் பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக இருக்கிறது. வெறும் சோறு மட்டும் சாப்பிடுவதால் அனைத்து சத்துக்களும் நமக்குக் கிடைக்காது. கீரை, பழங்கள் ஆகியவற்றை உண்ண வேண்டும். இட்லி பொடி, ஊறுகாய் ஆகியவற்றுக்கு பதிலாக புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி ஆகியவற்றை உண்ண ஆரம்பித்தால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். உணவில் இலைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். 

 

இன்று மக்களுக்குத் தேவையான காய்கறிகளை விவசாயிகள் பயிரிடுவதில்லை. பாரம்பரிய உணவுகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவரைக்காய், வெள்ளரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், மொச்சை ஆகியவற்றிலும் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. டிரை ப்ரூட்ஸ் என்று சொல்லப்படுகிற பேரிச்சம்பழம், காய்ந்த திராட்சை ஆகியவற்றிலும் இரும்புச்சத்து அதிகம். ஈரல் போன்ற ஆட்டின் உறுப்புகளில் இரும்புச்சத்து இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு அவற்றை வழங்க வேண்டும். 

 

ஹீமோகுளோபின் குறையும்போது வேலை செய்யும் திறன் குறையும். உணவின் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். இரத்தத்தை இழக்கும் சமயத்தில் ஆண்களுக்கும் இது ஏற்பட வாய்ப்புண்டு. பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் இது ஏற்பட அதிக வாய்ப்புண்டு. காய்கறிகள், பழங்களை நாம் சரியாக உண்டு வந்தாலே இந்த நோய் ஏற்படாமல் தடுக்கலாம். இந்த நோயால் இதயமும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.