Skip to main content

"என்னைக் கொல்லுங்கள்" -அன்னை தெரசா

Published on 05/02/2019 | Edited on 09/02/2019

நம்மில் மதத்தால் இன்று பலவிதமான கோட்பாடுகள் இருந்தாலும் எல்லாருடைய  மதத்தின் அடிப்படை அன்பு செய்தல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதே ஆகும் .தேசபக்தி என்பது மக்களுக்குத் தொண் டாற்றுவது என விவேகானந்தர் குறிப்பிட்டார். அவர் ஒரு புறம் மதத் தலைவராக காணப்பட்டார். மறுபுறம் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். அவரை அரசியல்வாதியாகவும் உயர்ந்த தலைவராகவும் மதிப்பிட்டார், ஜவஹர்லால்நேரு. விவேகானந் தர் இந்து மதத்தை நேசித்தவர். அவரைப் போன்றே மதத்தலைவராக அன்னை தெரசாவைக் குறிப்பிடலாம்.ராமகிருஷ்ண மடத்தை விவேகானந்தர் தோற்றுவித்தார். அன்னை தெரசாவும் 1950, அக்டோபர் 7-இல் அன்பின் பணியாளர் சபையைத் தோற்றுவித்தார்.  போப் ஆண்டவரும் அங்கீககாரம் அளித்தார். பின்னர் 1952, ஆகஸ்ட் 22-இல் இறப்போர் நல இல்லத்தைத் தோற்றுவித்தார். அது இப்போது 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை பரப்பி செயல்படுகிறது.  

 

annai theresa

1963-இல் சகோதரர்கள் சபையை உருவாக்கினார். 1964-இல் உடன் உழைப்போர் சபை உருவானது. அன்னை தெரசாவின் தலைமையில் அவர் உருவாக்கிய அமைப்புகள் உலகெங்கும் சிறப்பான மனிதநேயத் தொண்டாற்றி வருகின்றன. அன்னை தெரசாவின் பணி விலை மதிக்க முடியாதது.அவர் யூகோஸ்லாவின் ஸ்காட்ஜே நகரில் நிக்கோலா - திரானா எனும் அல்பேனிய தம்பதியருக்குப் பிறந்த மூன்றாவது குழந்தை. பெற்றோர் இட்ட பெயர் ஆக்னஸ் கொன்சகா பொஜாக்கியு!சிறுவயதிலேயே இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று யூகோஸ்லாவியாவிலிருந்து கனவு கண்ட சின்னஞ்சிறுமலர் இவர்!1928, செப்டம்பர் 26-இல் அவர் இந்தியாவுக்குப் புறப்பட்டபோது அவருக்கு வயது 18. அன்னையை, தன் குடும்பத்தினரைப் பிரிந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார். பின்னர் வாழ்நாள் எல்லாம் அன்னையை அவர் சந்திக்க முடியாமல் போனது. 1929-ஆம் ஆண்டு ஜனவரி 6-இல் கல்கத்தா வந்து சேர்ந்தார். தன்  பெற்றோர் இட்டப் பெயரைக் கைவிட்டு, தெரசா என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார்.பின்னர் இரண்டாண்டு இறையியல் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி முடித்து சகோதரி தெரசா ஆனார்.

p class="text-align-justify">1946, செப்டம்பர் 10-ல் சேரிகளுக்கு சென்று சேவை செய்ய வேண்டம் என அவர் மனம் துடித்தது. இதற்குள் சுமார் 17ஆண்டுகாலம் ஆசிரியர் பணி செய்து முடித்து விட்டார்!
பின்னர் 1948 டிசம்பர் 15-இல் மூன்றுமாத மருத்துவ படிப்பை அவர் முடித்தபோது அவருக்கு வயது 38.1948, டிசம்பர் 21அன்று வெறும் ஐந்து ரூபாய் மூலதனத்துடன் போட்டிஜில் சேரிக்கு சேவை செய்யச் சென்றார்.1949 தெரசாவின் தூய தொண்டுக்குத் துணையாக அவரது முன்னாள் மாணவி சுபாஷினி  உடன் வந்தார். 1949 மார்ச் 19 அன்று சூசையப்பரின் பெருநாள். அந்த தினத்திலிருந்து அவர் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்டார். பின்னர் இறப்போர் நல இல்லம், தொழுநோய் மருத்துவமனை, குழந்தைகள் காப்பகம், சகோதரர் சபை, உடல் உழைப்பாளர் சபை என அவரது அமைப்பு விரிவடைந்தது. அவரது குழு பெருகியது. அவரைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.இந்தியாவின் பல இடங்களில் அவரது அன்பின் பணியாளர் சபை உருவானது.
1965 ஜூலை 26-ல் வெனிசூலா நாட்டில் அன்பின் பணியாளர் கிளை உருவானபோது அன்னை தெரசாவின் ச

 

annai theresa with child

கோதரி நிர்மலா உடன் சென்றார்.

 

1972-ல் அன்னை தெரசாவின் தாய் திரானா அப்பேனியாவில் மரணம் அடைந்தார். 18 வயதில் பிரிந்த தாயை 62 வயதான அன்னை தெரசாவால் பார்க்க முடியவில்லை. அல்பேனியா அரசு அன்னை தெரசாவை அனுமதிக்கவில்லை. 1975-ல் அவரது அக்காவும் 1981-ல் அண்ணனும் மரணம் அடைந்தனர்.1989-ல் செப்டம்பர் 3-ல் அவருக்கு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டது. அன்னை தெரசாவின் அண்ணன் மகள் ஆஜு உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் உடனிருந்து அன்னையைக் கவனித்துக் கொண்டார். பின்னர் அடிக்கடி உடல் நலம் குன்றியது.1997-ல் ஜனவரி அன்பின் பணியாளர் சபையின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 1997 மார்ச், 3 அன்று சகோதரி நிர்மலாவை தனக்குப் பின்னர் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்தார்.1997 செப்டெம்பர் 5 வெள்ளிக்கிழமை அன்று அன்னை தெரேசா மரணம் அடைந்தார்.ஒரு குழுவை உருவாக்கி மாபெரும் ஸ்தாபனமாக, கட்டுக்கோப்புடன் வழி நடத்துவது எப்படி என்பதை அவரது வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளலாம். ஓர் அமைப்பைப் பலப்படுத்துவதற்குள் அவர் சந்திக்க நேர்ந்த சங்கடங்கள் கண்ணீரை வரவழைக்கும். ஒருமுறை கல்கத்தாவின் தெருக்களில் கையேந்தி நிதி வசூல் செய்துகொண்டிருந்தார் அன்னை தெரசா. ஒரு பெரிய பணக்காரன் வீட்டின் முன்பு நின்றிருந்தார். அவன் அன்னையை ஏளனமாகப் பார்த்தான். அழுக்கு மனிதர்களுக்கு வெளிச்ச நீருற்றும் அந்த வெள்ளை தேவதையின் கரங்களில் பொற்காசுகளை இடாவிட்டாலும் ஒருசில இந்திய நாணயங்களை தந்திருக்கலாமே! ஆனால் அந்த பணக்காரன் என்ன செய்தான் தெரியுமா? அன்னை தெரேசாவின் கரங்களில் காறி உமிழ்ந்தான்.  அதனைக்கண்டு அருகில் நின்றிருந்த கன்னியர்கள் மனம் பதறினார். அன்னையின் மனஉறுதி கம்பீரமாக உயர்ந்து நின்றது. சற்றும் மனம் கலங்கவில்லை. முகமலர்ச்சியோடு அவன் எச்சில் உமிழ்ந்த கரங்களை மூடிக்கொண்ட அன்னை தெரசா ""இந்த எச்சில் எனக்குப் போதும். என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள்'' என்றார். அன்னையின் சொற்கள் அவன் இதயத்தில் விழுந்தன. ஏளனப் பார்வை மாறியது. அவனுக்குள் புதிய வெளிச்சம். சட்டென காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.  தன் தவறுகளை உணர்ந்தார். வேண்டும் உதவிகளை வாரி வழங்கினார்!

இன்னொரு சம்பவம் -இறப்போர் நல இல்லம் தொடங்கியதும் சில வாரங்களில் எதிர்ப்பு கிளம்பியது.  "காளிக்கோவில் அருகில் கர்த்தரின் ஆட்களா' என்று மதவெறியர்கள் கூச்சலிட்டனர். கோயில் பூசாரியுடன் சேர்ந்து அன்னையின்மீது கற்களைவீசி கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். அன்னை வெளியில் வந்து தைரியமாக நின்றார்.  "என்னைக் கொல்லுங்கள். ஆனால், இறந்துகொண்டிருப்போரை நிம்மதியாக சாக விடுங்கள்' என்றார். பின்னர் கூட்டம் அமைதியாகச் கலைந்து சென்றது. இதில் ஒரு திருப்பம் என்னவென்றால் அன்னையை மிரட்டிய  கோயில் பூசாரியே சாகும் தறுவாயில் அன்னையிடம் அடைக்கலம்  வேண்டி நின்றார்.நாம் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அன்பும்,உதவி செய்தலும் என்றுமே நம்மளை ஒற்றுமையாக இருக்க வைக்கும் .
 

Next Story

'உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை'-கொதித்தெழுந்த ஜேம்ஸ் வசந்தன்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 'From the time of your father-in-law to your grandchildren today'-boiled James Vasanthan

'தாங்கள் கனடாவில் வீடு இல்லாமல், கார் இல்லாமல் கஷ்டப்பட்டபோது தேவதூதர் ஒருவர் கனவில் வந்து, கார் வாங்க உதவி செய்தார்' என பால் தினகரனின் மனைவி இவாஞ்சலின் வெளியிட்ட வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்த ஜேம்ஸ் வசந்தனின் பதிவில்,

'இவாஞ்சலின் பால் தினகரன் அவர்களுக்கு,

அண்மையில் நீங்கள் பேசியிருந்த ஒரு காணொளி என் கவனத்துக்கு வந்தது. இந்தக் குறிப்பிட்ட காணொளி கிறிஸ்தவர் மட்டுமல்லாது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அது நேர்மறையான காரணத்துக்காக அல்ல; ஏளனத்துக்கும் நகைப்புக்கும்.

இந்தக் கேலியும் கிண்டலும் உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தைப் பற்றியோ தனிப்பட்ட விதத்தில் இருந்திருந்தால் என்னை ஒன்றும் பாதித்திருக்காது. உங்களுக்காக கொஞ்சம் பரிதாபப்பட்டுவிட்டு, என் வேலையைப் பார்த்திருப்பேன். ஆனால், அது ஆண்டவரையும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் தவறாகக் காட்டியதால் இந்தப் பகிர்வு.

உங்கள் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான குடும்பம் என்பது உலகத்துக்கே தெரியும். புகழிலும், பேரிலும் மட்டுமல்ல; பணத்திலும், சொத்திலும்தான். பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு நீங்கள் அதிபதி என்பது ஊரறிந்த ரகசியம். உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை அத்தனை பேரும் எப்படிப் படாடோபமான செல்வச் செழிப்பில் திளைக்கிறவர் என்பது மறைக்கவே இயலாத உண்மை. உலகப் பணக்காரர் பட்டியலில் ஏன் உங்கள் குடும்பத்தின் பெயர் வருவதில்லை என்று நாங்கள் வியப்பதுண்டு!

 'From the time of your father-in-law to your grandchildren today'-boiled James Vasanthan

உங்கள் குடும்பம் எதற்கு, எப்படி கனடா நாட்டுக்குச் சென்றது; அந்தக் குடியுரிமை எப்படி வாங்கினீர்கள்; பின் எதற்காக, எப்படி அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் சென்றீர்கள்; இன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரத்தில் எவ்வளவு பெரிய வீட்டை வாங்கிக் குடியிருக்கிறீர்கள்; வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த செய்தியை எவ்வளவு ரகசியமாக பல ஆண்டுகள் ஒளித்து வைத்தீர்கள்; அவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலகோடி வருமானம் போய்விடும் என்பதால் அதிகப் படிப்போ, உலக அறிவோ இல்லாத பல இலட்ச பாமர விசுவாசிகளை எப்படி இங்கிருப்பது போலவே ஏமாற்றி வந்தீர்கள் என்பவை போன்ற பல தகவல்களை மேல் மட்டக் கிறிஸ்தவர் அறிவர்.

இந்தச் சூழலில் நீங்கள் "எப்படி ஒரு வீடு கூட இல்லாமல் ஓட்டலில் தங்கியிருந்தோம்" என்று நடிகையர் திலகம் அவர்கள் திறமையை மிஞ்சும் விதமாகக் குரலை தாழ்த்தி, உதடுகள் துடிக்க, வரும் கண்ணீரை அடக்க முயல்வது போலெல்லாம் ஒரு சாகஸம் செய்திருக்கிறீர்கள்!

ஒரு வீடு இல்லாமல் இத்தனை குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய் கனடா நாட்டில் ஒரு நட்சத்திர விடுதியில் நாட்கணக்கில் தங்கக்கூடியவருக்கு எவ்வளவு பண வலிமை இருக்கும் என்று கொஞ்சம் அறிவு உள்ளவன் கூட யோசிப்பான் என்று உங்களுக்குத் தோணலையா? இவ்வளவு அப்பட்டமாகப் பொய் பேசினால் அசிங்கமாகி விடுமே என்றுகூட உங்களால் சிந்திக்க முடியலையா?

எதற்காக தேவையற்ற இந்தப் பொய் நாடகம்? அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து? வேதத்திலுள்ள நல்ல செய்திகளை மட்டும் நீங்கள் பேசினால் போதும்; உங்களுடைய பொய்சாட்சிகள் வேண்டாம்!

வீடு வாங்கிய கதையும், கார் வாங்கிய கதையும், இந்த அம்மா விடுற கதைகளையும் கேட்கக் கேட்கக் கொதிக்கிறது என்று பல கிறிஸ்தவ விசுவாசிகள் புலம்புகிறார்கள். தமிழ்க் கிறிஸ்தவச் சமூகமே அவமானத்தில் குறுகி நிற்கிறது.

உங்கள் குடும்பத்தின் உண்மையான பின்னணியை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிடக் காத்திருக்கின்றனர் பலர். அது கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் மட்டுப்படுத்திவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காக்கின்றனர். கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிற பல கோமாளிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்க உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது. நற்செய்தியைப் பரப்பவேண்டிய பொறுப்பிலுள்ள நீங்கள் ஏன் இப்படிப் பொய்ச்செய்தியைப் பரப்பி பணம் பறிக்க முயல்கிறீகள்?

மூத்த தினகரன் தொடங்கிய அந்த நல்ல பணியை, உங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிற ஊழியத்தை கொஞ்சமேனும் உண்மையுடனும், மனச்சான்றுடனும் செய்ய முற்படுங்கள். இருக்கிற பணம் போதும். இதற்கு மேலும் ஏன் இப்படி வெறிபிடித்து அலைகிறீர்கள்? மக்களின் சாபத்துக்குக் கூட நீங்கள் தப்பித்து விடலாம். ஆண்டவரின் சினத்துக்கு ஆளாகிவிடாமல் கொஞ்சம் திருந்திச் செயல்படப் பாருங்கள்.

பலர் இன்னமும் உங்களை நம்புகிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா, உங்களை நினைத்து வேதனைப்படுவதா என்று புரியவில்லை!' என ஆதங்கப்பட்டுள்ளார்.

Next Story

மதபோதகரின் பேச்சைக் கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்த மக்கள்; 81 பேரின் சடலம் தோண்டியெடுப்பு

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

'இயேசுவை காணலாம் வாங்க' என போதகரின் பேச்சைக் கேட்டு 80க்கும் மேற்பட்டோர் கென்யாவில் பட்டினி கிடந்து உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கென்யாவின் மலிந்தி பகுதியில் உள்ள ஷஹாகோலா எனும் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஒன்றில் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை என மொத்தமாக 50க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் முதல் கட்டமாக கண்டெடுக்கப்பட்டது. 'இயேசுவை காண வேண்டுமென்றால் பட்டினி கிடந்து நோன்பு இருக்க வேண்டும்' என்று மத போதகர் கூறியதை நம்பிய அப்பகுதி மக்கள் பட்டினி கிடந்துள்ளனர்.

 

இறுதியில் உணவின்றி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாருக்கும் தெரியாமல் வனப்பகுதியில் புதைக்கப்பட்ட பின்னணி வெளியானது. இது தொடர்பாக மத போதகர் பால் வேகன்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது கட்ட தேடலில் பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை மீட்கப்பட்ட சட்டங்கள் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. உள்ளூர் குழுக்கள் நடத்தி வரும் தேடுதலில் மேலும் பல உடல்கள் கைப்பற்றப்படலாம் என கூறப்படுகிறது.