Skip to main content

தொடர் சரிவை சந்திக்கும் டாடா மோட்டார்ஸ்...!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

 

tt

 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் விற்பனையில் 12% சரிவை சந்தித்துள்ளதென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

இதில் அந்நிறுவனத்தின் உயர்ரக வாகனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் இந்த ஆண்டு ஜனவரி மாதம் உலகளவில் 1,00,572 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது என்றும் இதே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கார் 1,14,797 எனும் அளவில் விற்பனையானது என்றும் தெரிவித்துள்ளது. 

 

அதேபோல் பயணிகள் வாகனங்களும் 15 சதவீதமும், வணிகரீதியான வாகனங்கள் 9 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 


கடந்த வாரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டின் வரவு செலவு  கணக்கை பதிவு செய்தது. அதில் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டில் ரூ. 26,961 கோடி நஷ்டம் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் அந்நிறுவனம் மற்றொரு சரிவை சந்தித்துள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு” - டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Investment of Rs.9 thousand crores TN Govt Agreement with Tata Company

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காகத் தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக் கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.3.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

அதாவது தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே. விஷ்ணு, டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் வி. அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநர் கி. செந்தில்ராஜ் மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story

டாடா மோட்டார்ஸுக்கு கைமாறும் ஃபோர்டு ஆலை! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Ford plant to transfer to Tata Motors!

 

குஜராத் மாநிலத்தில் உள்ள ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 750 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. 

 

குஜராத் மாநிலம், சனந்த் நகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு தொழிற்சாலை மூடப்பட்டது. இதனையடுத்து, டாடா நிறுவனம், பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஆலையை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் ஏற்கப்பட்டது. 

 

ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கவும், டாடா மோட்டார்ஸ் முன்வந்துள்ளது.  

 

ஏற்கனவே, சென்னையை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு ஆலையின் கார் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார் விற்பனை குறைவு உள்ளிட்ட காரணங்கள் இந்தியாவில் குஜராத் மற்றும் சென்னை ஆலையில் உற்பத்தியை முற்றிலுமாக ஃபோர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது.