Skip to main content

இலங்கையில் தமிழ் அமைப்புக்கள் போராட்டம்

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
இலங்கையில் தமிழ் அமைப்புக்கள் போராட்டம்



இலங்கையில் அரசியல் கைதிகளின் வழக்குகளை தமிழ் பகுதி நீதிமன்றங்களுக்கு மாற்றக்கோரி வட மாகாணத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் சார்பில் நடத்தப்படும் முழுஅடைப்பால் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பரபரப்பாக காணப்படும் யாழ்ப்பாணம் நகரில் சில மருந்து கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. 

சார்ந்த செய்திகள்