Skip to main content

அதிபர் மாளிகையை நோக்கிச் சென்ற வெடிகுண்டு நிரப்பிய கார்!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

somalia

 

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷுவில், அந்தநாட்டு அதிபர் மாளிகையை நோக்கி தீவிரவாதி ஒருவன் வெடிமருந்து நிரப்பப்பட்ட காரை வேகமாக ஓட்டிவந்துள்ளான். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்த காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

 

இதில் அந்த கார் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் காரை ஓட்டிவந்த தீவிரவாதி பலியாகிவுள்ளான். இந்த கார் குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியாகியுள்ளார்.

 

பாதுகாப்புப் படையின் விழிப்புணர்வு, அப்பாவி சோமாலியா மக்களை, தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து கைப்பற்றியுள்ளது என அந்தநாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. அதிபரின் மாளிகை நோக்கி வெடிகுண்டுகளை நிரப்பிய கார் செல்ல முயற்சித்தது அந்நாட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்