Skip to main content

குழந்தையை மறந்த தாய்...! யூ-டர்ன் எடுத்த விமானம்...!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

சவுதி அரேபியாவின் ஜெட்டாக் விமான நிலையத்தில் பெண் ஒருவர் விமான நிலையத்தில் தனது குழந்தையை மறந்து விட்டுவிட்டு விமானத்தில் ஏறி, விமானம் பயணிக்கத் தொடங்கியபின் குழந்தை நினைவுக்குவந்து ‘என்னுடைய குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டேன்’ என அழுதுள்ளார். அதன் பின் விமானம் திரும்பி விமான நிலையத்திற்கே வந்துள்ளது. 

 

airlines


சவுதி அரேபியாவின் ஜெட்டாக்கில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சவுதி அரேபியா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தையைவிட்ட அந்த பெண் அழுததும், உடனடியாக விமானி,  விமானத்தை விமான நிலையத்திற்கு திருப்ப கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதியை கோரியுள்ளார்.
 

அனுமதி அளிக்கப்பட்டு, அந்த விமானம் திரும்பி ஜெட்டாக் விமான நிலையத்திற்கே வந்துள்ளது. இதுதொடர்பாக விமானி பேசும் 'கிளிப்' சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது விமானம் வானில் பறக்க தொடங்கி விட்டதா? அல்லது ரன்வேயில் சென்றுகொண்டிருந்ததா? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரபிக் கடலில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்; நடுக்கடலில் பரபரப்பு

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
incident on a commercial ship in the Arabian Sea!

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.  

சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு எம்.வி.செம் என்ற வணிகக் கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றி வந்தது. அந்த கப்பல் குஜராத் மாநிலம், போர்பந்தர் பகுதியிலிருந்து 217 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், கப்பல் தீப்பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட தகவலை அடுத்து கடலோர படையினர் உதவிக்கு விரைந்தனர்.

அங்கு விரைந்த கடலோர படையினர், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதன் பின்னர், கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் உட்படக் கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தீ பற்றியதால் கப்பலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு இந்திய கடற்படை போர்க்கப்பலும் அங்கு விரைந்துள்ளது.

இது குறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது, “சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை அதிகாரிகள், அங்கு விரைந்து உதவ புறப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். 

Next Story

சவுதி அரேபியா விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

saudi arabia airport

 

சவுதி அரேபியாவின் ஜிசான் நகரில் அமைந்துள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஆறு சவுதி அரேபியர்களும், மூன்று வங்க தேசத்தவர்களும், சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர். மேலும், விமான நிலையத்தின் சில முகப்பு ஜன்னல்களும் உடைந்துள்ளன.

 

இந்த ட்ரோன் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், சவுதி அரேபியாவைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தும் ஹவுதி அமைப்பே இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

 

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரபு மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்துவருகிறது. இந்த மோதலில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான படைகள் ஹவுதி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்திவருகின்றன. இதனையடுத்து ஹவுதி அமைப்பு, சவுதி அரேபியாவைக் குறிவைத்து தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவளித்துவருவது குறிப்பிடத்தக்கது.