Skip to main content

ஆணும் பெண்ணும் ஒரே மேஜையில் அமர்ந்து உணவு உண்ண தடை!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018

 

ACT

 

 

 

இந்தோனேசியா, பெண்கள் மணமானவர்களுடன் அல்லது உறவினர்களுடன் மாட்டுனம்தான் உணவகங்களில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண முடியும் அப்படி இல்லையென்றால் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண முடியாது மேலும் இரவு 9 மணிக்கு மேல் தனியாக சாப்பிட வரும் பெண்களுக்கு ஓட்டல் உணவு தரக்கூடாது எனவும் சட்டம் விதித்துள்ளது.இது பெண்களுக்கு தங்களை பாதுகாத்து கொள்ள உதவும் எனவும் அறிவித்துள்ளது.

 

இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் உலகின் மிக அதிகமான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஆஸெஹ் மட்டுமே இடம்பெற்றுள்ளது, பெண்களுக்கு ஒழுக்கநெறிகளைக் கொடுத்ததற்காக கடந்த காலத்தில் விமர்சிக்கப்பட்டது. மேலும் பெண்கள் மீதான தார்மீக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஓரினச்சேர்க்கை, சூதாட்டம் மற்றும் குடிப்பழக்கம் போன்ற குற்றங்களை எதிர்த்து உலகளாவிய கண்டனத்தை தெரிவித்து அதனால் உலகநாடுகள் கவனத்தை ஈர்த்த நாடு.

 

 

சமீபத்திய கட்டுப்பாட்டின் கீழ், சுமத்ரா தீவில் உள்ள பிரௌன் மாவட்டத்தில் உள்ள பெண்கள், அவர்களது கணவர் அல்லது ஒரு நெருங்கிய ஆண் உறவினர்கள் அல்லாத வேறு ஒருவருடன் உணவகங்கள் மற்றும் காபி கடைகளில் ஒரே மேஜையில் அமர்ந்து உணவு பகிர்ந்து கொள்ள முடியாது. அதேபோல் மதிய உணவு இடைவேளையின் போது ஆண் பெண் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என்றாலும் ஒரே மேஜையில் சாப்பிட முடியாது எனவும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

 

 

இந்தகட்டுப்பாட்டினால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள், ஆனால் ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இது வரம்புக்குட்பட்டதாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மாகாண தலைநகரான பண்டா ஆஸெஹ்வில் இரவு 11 மணிக்குப் பின் விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களிலிருந்து பெண்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஒவ்வொரு இஸ்லாமியரும் சி.ஏ.ஏ.வை வரவேற்க வேண்டும்” - அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
All India Muslim Jamaat President says Every Muslim should welcome CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தந்திருக்கிறார். இது தொடர்பாக, அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தை நான் வரவேற்கிறேன். இதற்கு முன்பே இதனை செய்திருக்க வேண்டும். இந்த சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்கள் இடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. இந்த சட்டத்தினால், இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதம் சார்ந்து அராஜகங்களை சந்திக்கும் இஸ்லாமியர் அல்லாதோர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் இதற்கு முன்பு எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. எனவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால், இந்திய இஸ்லாமியர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். இந்தச் சட்டம் எந்த இஸ்லாமியரின் குடியுரிமையையும் பறிக்கப் போவதில்லை. கடந்த ஆண்டுகளில், தவறான புரிதல்கள் காரணமாக, இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. சில அரசியல்வாதிகள், இஸ்லாமியர்கள் இடையே தவறான புரிதலை ஏற்படுத்தினார்கள். இந்தியாவின் ஒவ்வொரு இஸ்லாமியரும் சி.ஏ.ஏ.வை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவலர்! - வெளியான வீடியோ காட்சி

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
police kicking Muslims engaged in prayer in delhi

சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி இண்டர்லாக் பகுதியில் மசூதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய சமூகத்தினர் வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மசூதிக்கு சென்று தொழுவார்கள். அந்த வகையில், இன்று வழக்கத்தை விட அதிகளவில் வந்த இஸ்லாமியர்கள் இந்த மசூதிக்கு தொழுகைக்காக கூடினர். இதனால், அந்த மசூதியில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அங்கு வந்த இஸ்லாமியர்கள் மசூதிக்கு வெளியே உள்ள சாலையில் தொழுகை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அவர்களைக் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர்கள் தொழுகையில் மும்முரமாக இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் ஒருவர், தொழுகை செய்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இஸ்லாமியர்களைக் காலால் எட்டி உதைத்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இது தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் டெல்லி வடக்கு போலீஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.