Skip to main content

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Russia's highest award for PM Modi

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “உலகத்தில் எரிபொருள் தேவை பெரும் சவாலாக இருந்தது. இது போன்ற நேரத்தில் உங்கள் ஒத்துழைப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பான சிரமங்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முடிந்தது. இது மட்டுமின்றி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஏற்பட்ட எரிபொருள் தொடர்பான ஒப்பந்தம் ஒரு வகையில் உலக நாடுகளுக்குச் சந்தையில் உறுதித்தன்மையை மறைமுகமாக அளித்ததை உலகமே ஏற்க வேண்டும்.

இது ஒரு சந்திப்பாக இருக்கலாம். மொத்த உலகத்தின் கவனமும் என்னுடைய இந்த பயணத்தின் மீது உள்ளது. இந்த வருகையின் மூலம் உலக நாடுகள் வெவ்வேறு அர்த்தங்களைக் கருதுகின்றனர். நேற்று நீங்கள் என்னை உங்கள் இல்லத்திற்கு அழைத்தீர்கள். ஒரு உண்மையான நண்பரைப் போல நாம் ஒன்றாக 4 - 5 மணி நேரம் செலவிட்டோம். பல தலைப்புகளில் விவாதித்தோம். உக்ரைன் பிரச்சினையை நாங்கள் வெளிப்படையாக விவாதித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் ஒருவருக்கொருவர் கருத்துக்களைக் கேட்டு மரியாதையுடன் புரிந்துகொள்ள முயற்சித்தோம். 

Russia's highest award for PM Modi

எங்கள் எதிர்கால சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அமைதி மிகவும் அவசியம் என்று ஒரு நண்பராக நான் எப்போதும் கூறி வருகிறேன். ஆனால் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் போர்க்களத்தில் தீர்வுகள் சாத்தியமில்லை என்பதையும் நான் அறிவேன். இதனால் தீர்வுகள் மற்றும் சமாதான பேச்சுக்கள் வெற்றியடையாது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நாம் அமைதிக்கான பாதையைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் (The Order of St. Andrew the Apostle) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ரஷ்யா - இந்தியா இடையேயான இரு தரப்பு உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளுக்காக இந்த விருதை வழங்கினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார். 

Russia's highest award for PM Modi

இது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், “கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் நடந்த சிறப்பு விழாவில் ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவரான விளாடிமிர் புடின் இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை மேம்படுத்துவதில் பங்களித்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய தேசிய விருதை வழங்கினார். இந்த விருது 2019 இல் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த விருதை ஏற்கும் போது அதனை இந்திய மக்களுக்கும், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவுக்காக அர்ப்பணித்தார். இந்த விருது 300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Prime Minister Modi's speech on the budget

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டார்.

இந்த பட்ஜெட் உரைக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இது புதிய நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்கான பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி மற்றும் திறன் இந்த பட்ஜெட்டில் இருந்து புதிய அளவுகோல் ஆகும். இந்த பட்ஜெட் புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகாரம் அளிக்கும். இந்த பட்ஜெட் பெண்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும். 

Prime Minister Modi's speech on the budget

இந்தப் பட்ஜெட்டில், வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது பல வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும். இத்திட்டத்தின் கீழ் புதிதாக பணியில் சேருபவர்களுக்கு முதல் மாத சம்பளத்தை அரசு வழங்கும். கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பயிற்சித் திட்டத்தின் கீழ் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்களில் பணியாற்ற முடியும்.

இன்று, பாதுகாப்பு ஏற்றுமதி மிக உயர்ந்த அளவில் உள்ளது. பாதுகாப்புத் துறையை தன்னிறைவு பெறச் செய்ய இந்தப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்ஜெட்டில் சுற்றுலா துறைக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வரி குறைப்பு மற்றும் டிடிஎஸ் விதிகள் எளிமைப்படுத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் நெடுஞ்சாலைகள், நீர்நிலைகள் மற்றும் மின் திட்டங்கள் அமைப்பதன் மூலம் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறோம். 

Prime Minister Modi's speech on the budget

நாம் இணைந்து இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவோம். நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) துறை நடுத்தர வர்க்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறையின் உரிமை நடுத்தர வர்க்கத்தினரிடம் உள்ளது. இந்தத் துறை ஏழைகளுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்குகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, கடன் வசதியை அதிகரிக்க புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி சூழலை கொண்டு செல்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் ஸ்டார்ட்அப் மற்றும் விண்வெளி பொருளாதாரத்திற்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரும்” எனப் பேசினார். 

Next Story

‘நாடாளுமன்றம் நாட்டுக்கானது, கட்சிக்காக அல்ல’  - பிரதமர் மோடி பேச்சு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Parliament is for the country, not for the party PM Modi's speech

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22.07.2024) தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23.07.24) தாக்கல் செய்ய உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று சவானின் முதல் திங்கட்கிழமை. இந்த புனிதமான நாளில் ஒரு முக்கியமான அமர்வு தொடங்குகிறது. சவானின் முதல் திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று முழுவதும் இது ஒரு நேர்மறையான அமர்வாக இருக்க வேண்டும். 

Parliament is for the country, not for the party PM Modi's speech

கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த அரசு, மூன்றாவது முறையாக முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வது பெருமைக்குரிய விஷயம். எங்களின் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான திசையை இன்றைய பட்ஜெட் தீர்மானிக்கும். இந்த பட்ஜெட் நமது  விக்சித் பாரத் கனவுக்கு வலுவான அடித்தளமாக அமையும். அனைத்துக் கட்சிகளும் கட்சி எல்லைகளுக்கு அப்பால் எழுந்து நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து, அடுத்த 4.5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தின் இந்த கண்ணியமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் 140 கோடி மக்களால் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் குரலை நசுக்கும் முயற்சியை நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சுமார் 2.5 மணி நேரம் பிரதமரின் குரலை நசுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாட்டு மக்கள் எங்களை நாட்டுக்காக சேவையாற்ற அனுப்பி வைத்துள்ளனர். கட்சிக்காக அல்ல. இந்த நாடாளுமன்றம் நாட்டுக்கானது, கட்சிக்காக அல்ல” எனத் தெரிவித்தார்.