Skip to main content

“உங்க பணமும் வேண்டாம்; பட்டமும் வேண்டாம்..!” - சாமானியனை கரம்பிடித்த ஜப்பான் இளவரசி!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

 the princess who leave crores of money and grabbed her boyfriend

 

ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் புமிஷ்டோவின் மூத்த மகள் இளவரசி மகோ ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த கெய் கொமுரோ என்னும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நண்பருடன் நட்பாகப் பழகியுள்ளார். பின்னர் நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. அரசக் குடும்பத்துப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்துகொள்ள தடை உள்ளது. இதனால் கடந்த பல ஆண்டுகளாகவே இவர்களின் திருமணத்துக்கு முட்டுக்கட்டை நிலவியது.

 

அதன்பின்னர் 2017ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர். திருமணம் என அறிவித்தது முதல் திருமண தாமதத்திற்கான காரணங்கள் சர்ச்சைகளாகக் கிளம்பின. ஆனாலும் இருவரும், உடனடியாக திருமணம் செய்துகொள்வதைவிட, தங்கள் வாழ்வைத் திட்டமிட காலம் தேவைப்படுவதாகக் கூறினர். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நவம்பரில் இம்பீரியல் ஹவுஸ் ஹோல்ட் ஏஜென்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இளவரசி மகோ, “நாங்கள் திருமணம் செய்துகொள்வதுதான் எங்கள் இதயங்கள் மதிப்புடன் வாழ்வதற்கு சிறந்த தேர்வு. எங்களில் ஒருவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.

 

dsafda

 

மகிழ்ச்சியான நேரங்களிலும் மகிழ்ச்சியற்ற நேரங்களிலும் ஒருவருக்கொருவர் தோள் சாய்ந்து கொள்வோம்” என்று கூறினார். அதேபோல் அரசு வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால், அவர் தனது அரசப் பட்டத்தைத் துறக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி காதலனைக் கைப்பற்றுவதற்காக தனது அரசப் பட்டம் மற்றும் அரசு நிதியுதவி ஆகியவற்றை வேண்டாம் என இளவரசி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தங்களின் திருமணம் பாரம்பரிய முறையில் இல்லாமல், சாமான்யர்களைப் போல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தன. இந்நிலையில், இவர்களின் திருமணம் அக். 26 அன்று காலை நிறைவடைந்தது. மகோ பல ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காதலுக்காக அரச குடும்பத்தின் சொத்தை விட்டுக்கொடுத்தார்.

 

அவர் விட்டுக்கொடுத்த தொகை 137 மில்லியன் யென் அதாவது 1.2 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் சாமான்யரை திருமணம் செய்துகொள்ளும்போது ஒரு குறிப்பிட்ட தொகை அவருக்கு சீதனமாகக் கொடுக்கப்படும். அந்தத் தொகையை மகோ வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் இவ்வாறாக அரச குடும்பத்தின் சீதனத்தை நிராகரிக்கும் முதல் பெண் மகோதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அரச குடும்பத்தின் பெயரையும் தனது பெயருக்குப் பின்னால் அவர் பயன்படுத்த மாட்டார். அவரது கணவரின் குடும்பப் பெயரையே மகோ இனி பயன்படுத்துவார். உயர்வான அந்தஸ்த்தில் இருந்தபோதிலும் காதலுக்காக இளவரசி செய்த தியாகம் பலரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The famous director ss rajamouli caught in the earthquake in Japan

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமெளலி, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார்.

அவரது அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ராஜமெளலி, தனது மகன் கார்த்திகேயா மற்றும் தனது குழுவுடன் தற்போது ஜப்பானில் இருந்து வருகிறார். அங்கு ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்வில், ராஜமெளலி தனது மனைவியுடன் பங்கேற்று பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.

ஆர்.ஆர்.ஆர் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிற்கு பிறகு, 83 வயது மூதாட்டி ஒருவர், ராஜமெளலிக்கு 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில், “ஜப்பான் நாட்டு மக்கள், ஓரிகமி கிரேன்களை உருவாக்கி, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்திற்காக பரிசளிக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இந்த 83 வயது மூதாட்டி, ஓரிகமி கிரேனை பரிசாக அளித்து எங்களை ஆசிர்வதித்தார். இது விலைமதிப்பில்லாத பரிசு” என்று பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டார். இது தொடர்பான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

The famous director ss rajamouli caught in the earthquake in Japan

இந்த நிலையில், இன்று அதிகாலை நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், அப்பாவுடன் 28வது மாடியில் என்ன செய்வதன்று தெரியாமல் இருந்ததாகவும், ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. இது நிலநடுக்கம் என்பதை உணர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. நான் பயத்தில் இருந்தேன். ஆனால் சுற்றியிருந்த அனைத்து ஜப்பானியர்கள் எல்லாம், மழை பெய்ய ஆரம்பித்தது போல் அசையவில்லை” என்று கூறி தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை குறுஞ்செய்தியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். 

Next Story

‘அன்பே... பேரன்பே...’ - காதலரைக் கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024

தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்‌ஷய் குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.