Skip to main content

சிறுவயதிலேயே இப்படியா...? மியா ரசிகர்கள்... ஆதரவும் எதிர்ப்பும்

Published on 31/08/2018 | Edited on 31/08/2018

 

modeling

 

 

 

இஸ்ரேலில் வாழ்ந்து வரும் மியா அவ்லாளோ என்ற 5 வயது சிறுமியை இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் 50 ஆயிரம் பேர் தொடர்ந்து வருகின்றனர் காரணம் அந்த சிறுமியின் சிகை அலங்காரமும் அவருடைய பூனை கண்ணும்தான்.

 

தன்னுடைய சிறுவயதிலேயே மாடலிங் செய்து தனது புகைப்படங்களை வெளியிட்டு பிரபலம் அடைந்திருக்கிறாரார்  சிறுமி மியா. ஆனால் அதற்கு காரணம் அவர் மட்டும்மல்ல இஸ்ரேலை சேர்ந்த பிரபல சிகை அலங்கார ஒப்பனையாளர் சகி தஹரி என்பவரும்தான். சகி தஹரி கூறுகையில், நான் அவளுக்கு சிகை அலங்கரம் செய்து அவளது புகைப்படங்களை வெளியிட்டேன். மியாக்கு சிகை அலங்காரம் செய்து எளிமையானது காரணம் அவர் எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையுடன் அமர்ந்திருப்பார். நான் எப்போதுமே அவளை ''இளவரசி மியா'' என்றுதான் செல்லமாக அழைப்பேன் எனக்கூறியுள்ளார்.

 

modeling

 

 

 

மியாவின் பெண் ரசிகர்கள் எங்களுக்கு இதுபோல் சிகை இல்லையே என வருத்தப்படுவதாகவும் பொறாமைப்படுவதாகவும் ஆனால் அவளது சிகை அலங்காரம் மற்றும் கண்களுக்கு நாங்கள் ரசிகர்கள் என்றும் ஆதரவு விமர்சனங்களை குவித்து வருகின்றனர். அதேபோல் சிறுவர் சிறுமிகளை தங்களது விருப்பம்போல் விளையாட விடவேண்டும் சிறுவயதிலேயே இப்படியா? மாடலிங் செய்ய பணிப்பது என எதிர்கருத்துக்களும் குவிந்து வருகிறது சிறுமி மியாவுக்கு. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.