Skip to main content

பெண்களின் உள்ளாடையில் பெயரை எழுதினால் சாபம் பலிக்கும்!!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
bra temple


கடவுளிடம் கோரிக்கை வைப்பவர்கள், நன்கொடையாக ரூபாயோ, ஆபரணமோ கொடுப்பதை பார்த்திருப்போம். ஆனால், ஜப்பானிலுள்ள டோக்யோ நகரில் ஒரு கோவிலில் சாபம் விடுபதற்கு என வினோத நன்கொடை செலுத்தப்படுவது ஆச்சரியத்தை அளிக்கிறது. மற்றொருவருக்கு சாபம் விடுபதற்கு, அந்த கோவிலில் சென்று பெண்களின் உள்ளாடையை காணிக்கையாய் செலுத்தினால் போதுமாம். நம்முடிய சாபம் பலித்துவிடும் என்று அவ்வூர் மக்களால் நம்பப்படுகிறது. 
 

யாருக்கு சாபம் விட வேண்டுமோ,  அவருடைய புகைப்படத்தை அந்த உள்ளாடையில் ஒட்டி, மேலும் என்ன சாபம் என்பதை பார்ச்மென்ட் காகிதத்தில் எழுதி அந்த கோவிலில் கட்டினால் அது கண்டிப்பாக நடந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் யோகா ஆசிரியரை கண்டித்து அவரின் மாணவர்களால் இக்கோவிலில் இவ்வாறு உள்ளாடை கட்டப்பட்டது. பின்னர், உடனடியாக அந்த சாபம் பலித்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கம் அந்த பகுதிகளில் பரவியுள்ளது. இந்த கோவில் ’உள்ளாடை கோவில்’ என்றே பலரால் அறியப்படுகிறது. 
 

மேலும், இந்த கோவிலில் எவ்வாறு, எதனால் இந்த வழக்கம் தொடங்கியது என்பது தெரியவில்லை. இந்த வழிபட்டுக்கு எந்த ஒரு வரலாற்று ஆவணமும் இதற்கு இல்லை. அந்த கோவிலுக்குள் நுழைந்தாலே அங்கு முழுவதும் பெண்களின் உள்ளாடைகளும் அதில் சபீக்கப்பட்டவர்களின் பெயருமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.