Skip to main content

இலங்கை அதிபரை இந்திய ’ரா’ கொல்லத் திட்டமா?

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
modi sirisena


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையில், அதிபர் சிறிசேனாவை இந்திய உளவு அமைப்பன ரா கொல்ல சதி திட்டம் தீட்டிவருகிறது .இது இந்திய பிரதமர் மோடிக்கே தெரியாது என்று அங்கு சில ஊடகங்கள் செய்திகள் பரப்பின. இச்செய்தி வெளியான பின்பு இலங்கை முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இதை இலங்கை அரசு முற்றிலுமாக மறுத்து உள்ளது.
 

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொல்ல சதி செய்ததாக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா குற்றம் சாட்டவில்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
 

முன்னதாக, நேற்று முன்தினம் இலங்கையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய சிறிசேனா,” “இந்தியா மற்றும் இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல திட்டமிட்டது. ஆனால், இந்த திட்டம் குறித்து இந்திய பிரதமர் மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை முற்றிலுமாக மறுத்துள்ளது இலங்கை அரசு.


 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம்; பதவி விலகிய ராஜபக்சே

Published on 15/12/2018 | Edited on 15/12/2018

 

ran

 

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து கடந்த அக்டோபர் 26ம் தேதி சிறிசேனா  நீக்கினார். அதற்கு பதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.ஆனால் 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு 95 எம்.பிக்கள் மட்டுமே ஆதரவாக இருந்ததால் அவர் மீது ரணில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற முடியவில்லை. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். ஆனால், தேர்தல் நடத்தவும், ராஜபக்சே பிரதமராக செயல்படவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நேற்று அதிபர் சிறிசேன வெளியிட்ட குறிப்பில் ரணிலை தவிர வேறு ஒருவரைத்தான் பிரதமராக தேர்ந்தெடுப்பேன் என கூறியிருந்தார். இந்நிலையில் ராஜபக்சே இன்று தனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் கொடுத்துள்ளார். 

 

 

Next Story

ரணில் விக்ரமசிங்கேவுடன் இணைந்து செயல்படமுடியாது- மைத்திரிபால சிறிசேனா

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
sirisena


இலங்கையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவியை பறித்து அந்த இடத்தில் மஹிந்த ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து பல்வேறு அரசியல் குழபத்தில் சிக்கித் தவிக்கிறது இலங்கை. 
 

இந்நிலையில் சர்வதேச ஊடக நிறுவனங்களின் சந்திப்பில் இலங்கை அதிபர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ”பிரதமர் பதவியில் அமர்த்தப்படுபவர் அதிபருடன் இணைந்து செயல்படக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுடன் இணைந்து செயற்பட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வேறு ஒருவரை அழைத்துவர முடியும்” என்று அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
 

மேலும்,  பாரிய ஊழல் மோசடியில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு தொடர்புள்ளது. அது குறித்து ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சிறிசேனா தெரிவித்துள்ளார்.