Skip to main content

கரோனா பரவல்; ஈரானில் பலி எண்ணிக்கை உயர்வு...

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ள சூழலில், உலக நாடுகள் பலவும் இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

corona in iran

 

 

இந்நிலையில், ஈரானின் கரோனா வைரஸ் பாதிப்பால் 43 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் துணை சுகாதார மந்திரி இரானி சர்ச்சி, துணை அதிபர் மசூமே எப்டேகர் ஆகியோருக்கு காண வைரஸ் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அந்நாட்டில் இதுவரை 2000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை ஈரானில் 43 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்