
இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா, அரசுக்கு கூட்டணி கட்சிகள் அளித்துவந்த ஆதரவு வாபஸ் என இலங்கை அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்களால் அரசுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், எந்தச் சூழ்நிலையிலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகப்போவதில்லை என இலங்கை நாடாளுமன்றத்தின் தலைமைக் கொறடா அறிவித்துள்ளதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.