இங்கிலாந்து நாட்டில் மில்டன் கெயின்ஸ் நகர போலீசார் சமீபத்தில் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிந்த செய்தி நகைச்சுவையாய் இருந்தது. அந்தப் பதிவின்படி நந்தினி சின்ஹா என்பவரிடம் வாகன உரிமத்தை வாங்கி பரிசோதனை செய்த பொழுது அதிலிருந்த பெயரும், புகைப்படமும் அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள மில்டன் கெயின்ஸ் நகரில் போலீசார் அன்று சிக்னலில் நிற்காமல் சென்ற நந்தினி சின்ஹா என்பவரை பின்தொடர்ந்து அவரின் வாகன உரிமத்தை வாங்கிப் பார்த்த பொழுது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அதில் நந்தினி சின்ஹாவின் பெயரோ, புகைப்படமோ, முகவரியோ, பிறந்த தேதியோ இல்லை. அதற்கு பதிலாக குழந்தைகள் ரசித்துப் பார்க்கும் கார்டூன் கதாபாத்திரமான "ஹோமர் சிம்ப்சன்" புகைப்படம், அதன் பெயரிலே கையொப்பம் என அனைத்தும் இருந்தது. அதனால் போலீசார் நந்தினி சின்ஹாவை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து மில்டன் கெயின்ஸ் போலீசார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் "ஓட்டுனரின் கார் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் முறையான வாகன ஓட்டுனர் உரிமம் இல்லை, இது தான் இருந்தது" என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பதிவு செய்திருந்தனர்.
லைசென்ஸில் கார்ட்டூன் பாத்திரம், அதிர்ச்சியில் போலீசார்!
சார்ந்த செய்திகள்
Next Story
பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.
போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.
புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Next Story
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு
அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.