Skip to main content

ரோஹிங்யாக்களைக் கொன்ற மியான்மர் ராணுவ வீரர்களுக்கு சிறை!

Published on 11/04/2018 | Edited on 11/04/2018

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களைக் கொன்ற அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Rohingya

 

மியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராக்கைன் பகுதியில், மியான்மர் ராணுவ முகாம்களின் மீது ரோகிங்யா கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்யா மக்கள் வாழும் பகுதிகளுக்குள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 6 லட்சம் ரோஹிங்யாக்கள் வங்காளதேசத்தின் எல்லைப்பகுதியில் தஞ்சம் புகுந்தனர்.

 

இந்தத் தாக்குதலின்போது ராக்கைனின் இன் டின் கிராமத்தில் 10 ரோஹிங்யா ஆண்களை, ராணுவத்தினர் கொன்று புதைத்தனர். இதில் தொடர்புடைய நான்கு அதிகாரிகள், 3 படைவீரர்கள் உட்பட ஏழு பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மியான்மரில் வெளியாகும் குளோபல் லைட் இதழ் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என குளோபல் லைட் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ரோஹிங்கியா முகாமில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி; 920 மில்லியன் நிதியுதவி வழங்க ஐ.நா திட்டம்...

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

thrrg

 

ரோஹிங்கிய அகதிகள் அதிக அளவில் உள்ள வங்கதேசத்தின் டெக்நாப் அகதிகள் முகாமை பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி பார்வையிட்டார். ஐ.நா சபையின் அகதிகள் நலமுகமை செயலாளராக உள்ள நடிகை ஏஞ்சலீனா ஜோலி நேற்று வங்கதேசம் வந்தடைந்தார். அதனை தொடர்ந்து டெக்நாப் அகதிகள் முகமை பார்வையிட்டார். மேலும் இன்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களை பார்வையிட உள்ளார். உலகிலேயே மிக பெரிய அகதிகள் முகாமான குடுப்பாலோங் முகாமை இன்று பார்வையிட உள்ளார். ஐ.நா சபை ரொஹிங்கியாக்களுக்கு உதவும் வகையில் சுமார் 920 மில்லியன் டாலர்கள் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டவரைவு தயாரிக்கும் பணி நிமித்தமாகவே ஏஞ்சலினா ஜோலி வங்கதேச சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். வங்கதேசத்தில் சுமார் 7,60,000 ரோஹிங்கிய அகதிகள் வாழ்வது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

ராணுவத் தளவாடங்களாகும் ரோஹிங்யா கிராமங்கள்! - அதிர்ச்சி தரும் ஆம்னெஸ்டி

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

ரோஹிங்யா முஸ்லீம்களை விரட்டிவிட்டு அவர்களின் கிராமத்தில் மியான்மர் அரசு ராணுவத் தளவாடங்களை அமைத்துவருவதாக ஆம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது.

 

மியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது மியான்மர் பாதுகாப்புப் படை. இந்தத் தாக்குதலில் ராக்கைன் பகுதியைச் சேர்ந்த ஏராளமான ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 7 லட்சம் ரோஹிங்யாக்கள் வங்காளதேசத்தின் எல்லைகளை நோக்கி தஞ்சம் புகுந்தனர். 

 

Rohi

 

இந்நிலையில், ரோஹிங்யா முஸ்லீம்கள் வாழ்ந்த கிராமங்களில் இருந்த வீடுகள் மற்றும் மசூதிகளை மியான்மர் ராணுவம் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டதாகவும், அந்தப் பகுதிகளில் ராணுவ தளவாடங்களை கட்டமைத்து வருவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது. 

 

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக கூகுள் நிலவரைபடங்களை ஆம்னெஸ்டி முன்வைக்கிறது. அதன்படி, முந்தைய வரைபடங்களோடு ஒப்பிடும்போது பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாக அது தெரிவிக்கிறது.

 

மியான்மர் அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆங் சான் சூசி அல்லது மற்ற உயர்பதவியில் இருக்கும் யாவரும், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் திரும்பிவரும் ரோஹிங்யாக்களுக்காக அவர்களது கிராமங்களைப் புதுப்பித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.