Skip to main content

நீ அழகா இல்ல... திருமணமான 20 நாளில் நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கொடூரன்!

Published on 15/06/2018 | Edited on 15/06/2018
husband arrested


திருமணமான 20 நாளில் தனது நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கிராமம் செட்டிமூலை. அங்குள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்த வீராசாமி - நீலாபதி தம்பதியினரின் மகள் லட்சுமி. இவரை கடந்த மே மாதம் 25ஆம் தேதி தலைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன் ராஜேந்திரனுக்கு திருமணம் செய்துகொடுத்தனர். மாமனார் வீட்டு விருந்துகள் முடிந்து தலைக்காடு கிராமத்திற்கு வந்தனர் இருவரும். 

 

 

 

 

திடீரென ஒரு நாள் தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வேண்டும் என்று லட்சுமியின் நகைகளை வலுக்கட்டாயமாக பிடிக்கி சென்ற ராஜேந்திரன், அதன் பின்னர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். நீ அழகா இல்ல என்று சொல்லி அடிக்கடி லட்சுமியிடம் தகராறிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லட்சுமியை சினிமாவிற்கு போகலாம் கூறி அழைத்து சென்றிருக்கிறார். போகிறவழியில் இவர்கள்தான் எனது நண்பர்கள் என்று இரண்டு பேரை காட்டியுள்ளார். இவர்களோடு இங்கேயே இரு... உடனே வந்துவிடுகிறேன் என்று நண்பரின் வீட்டில் மனைவியை விட்டுவிட்டு சென்றிருக்கிறார் ராஜேந்திரன். 

 

 

 

 

    இந்தநிலையில் இரவு 2 மணியளவில் அலங்கோலமாக அழுகையோடு வீட்டுக்கு வந்த லட்சுமி, கணவன் ராஜேந்திரனின் சட்டையை பிடித்துக்கொண்டு, என்னோட வாழ்க்கைய சீறழிச்சிட்டியே உன்னோட மனைவிய உன்னோட அந்த நாய்களுக்கு விருந்தாக்க நினைச்சியே உன்னோட இனி நான் இருக்க மாட்டேன் என்று தாய் வீட்டிற்கு கிளம்பிய லட்சுமியை தடுத்து நிறுத்திய ராஜேந்திரன், நீ உங்க அப்பன் வீட்டுக்கு போ... ஆனா இங்க நடந்தத வெளியே சொன்னா நீ உசுறோட இருக்க மாட்ட... என கூறியிருக்கிறான் ராஜேந்திரன்.

 

 

 

 

    கோபத்தின் உச்சத்திற்கே சென்ற லட்சுமி என்னோட உசுறே போனாலும் உண்ண சும்மாவிடமாட்டேன் என்று பிடிவாதமாக கிளம்ப, வாசலில் கிடந்த உலக்கை எடுத்து முகத்திலேயே அடித்திருக்கிறான். வலி தாங்க முடியாத லட்சுமி ராஜேந்திரன் அந்த இடத்தில் இருந்து செல்லும் வரை அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் செல்போன் மூலம் பெற்றோருக்கு சம்பவத்தை சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த லட்சுமியின் பெற்றோர் உடனடியாக வந்து லட்சுமியை மீட்டு திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீசிலும் புகார் கொடுத்தனர். ராஜேந்திரன் மீது தலைஞாயிறு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது நண்பர்களில் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை மறைவான மற்றொருவரை தேடி வருகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.