Skip to main content

டிடிவி தினகரன் தொப்பி போடுவாரா? விசில் அடிப்பாரா?

Published on 03/12/2017 | Edited on 03/12/2017
டிடிவி தினகரன் தொப்பி போடுவாரா? விசில் அடிப்பாரா?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதுவரை ஆர்.கே.நகர் இடை தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரையில் 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்த முறை திமுக சார்பில் மருதுகணேஷ், ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் மதுசூதனன், டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தொப்பி, விசில், கிரிக்கெட் மட்டை ஆகிய சின்னங்களில் ஏதாவது ஒன்று வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். 



தொப்பி சின்னம் மீண்டும் டிடிவி தினகரனுக்கு கிடைக்காத வகையில் ஆர்கே நகரில் தங்களுக்குதான் தொப்பி சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இதுவரையில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளனர்.  இதனால், தொப்பி சின்னத்துக்கு டிடிவி தினகரன் உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தொப்பி சின்னம் கிடைக்காத பட்சத்தில் விசில் சின்னத்தை டிடிவி தினகரன் ஒதுக்க வேண்டும் என கோர இருக்கிறார் என கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்