Skip to main content

இராமநாதபுரத்தில் உலக முதியோர் தின விழா

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
இராமநாதபுரத்தில் உலக முதியோர் தின விழா



இராமநாதபுரத்தில் சமூகநலத்துறை சார்பாக முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பின சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் நடராஜன் சர்வதேச முதியோர் தினம் 1991 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மூத்தகுடிமக்களின் திறமைகளை உணர்ந்து சமூகத்திற்க்கான அவர்களின் பங்களிப்புகளை உறுதி செய்வதே 2017ம் ஆண்டின் சர்வதேச முதியோர் தினத்தின் நோக்கமாகும்.நம்முடைய பராமரிப்பது நம்முடைய கடமையாகும். இந்திய குடும்ப வாழ்க்கையில் ஓர் அங்கமாக தொன்றுதொட்டு வருகிறது வயதில் இளையவர்கள் மூத்தவர்களை மதிக்க கற்று கொள்ளவேண்டும். அவர்களுடைய அறிவுரைகள் கூட்டுகுடும்பத்தின் ஆனிவேராக உள்ளது. ஆனால் இன்றைய நிலையில் முதியோர்களை பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது வேதனை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேசினார்.

-பாலாஜி

சார்ந்த செய்திகள்