Skip to main content

பிரபல நடன இயக்குநர் மீது பாய்ந்த போக்சோ

Published on 18/09/2024 | Edited on 18/09/2024
flim

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் நடிகர்கள் ரஜினி, விஜய், தனுஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.

குறிப்பிடத்தகுந்த வகையில் புட்ட பொம்மா, அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவலா உள்ளிட்ட பாடல்கள் இவருடைய நடன இயக்கத்தில் உருவானவை. தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே' என்ற பாடலுக்காக 2022 ஆம் ஆண்டு சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும் ஜானி பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உதவிப் பெண் நடன இயக்குநருக்கு ஜானி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆந்திராவின் ராய்துர்க்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த புகாரில் படப்பிடிப்பின் போதே பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் திரைப்படங்களில் பணியாற்ற தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் அவருக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றுக்குள் நுழைந்து சண்டையிட்டதற்காக சிறை சென்ற நிலையில் தற்போது பாலியல் புகாரில் போக்சோவில் ஜானி மாஸ்டர் சிக்கியுள்ளது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சார்ந்த செய்திகள்