Skip to main content

“உழைப்பால், முயற்சியால் வெற்றிபெற முடியாது!” -ரஜினி; வெளிப்படையா? விரக்தியா?

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

கடந்த மார்ச் மாதம், சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், பல்கலைக்கழக வளாகத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையைத் திறந்து வைத்தார் ரஜினிகாந்த்.

 

rajini

 

 

 

இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம் புதிய நீதிக்கட்சியின் தலைவரும் ஆவார். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்றும் அவருடைய அரசியல் பயணத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் சொல்லி வருபவர். அவருக்கு  இங்கிலாந்து-ஸ்காட்லாந்து-கிளாஸ்கோவில் உள்ள ராயல் காலேஜ் ஆப் பிசிசியன்ஸ் & சர்ஜன்ஸ் அமைப்பு டாக்டர் பட்டம் தந்து கவுரவித்தது. சிறப்புமிக்க இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இந்தியராக இருக்கிறார் ஏ.சி.சண்முகம். ஏழைகளுக்குத் தேவையான மருத்துவ சேவை வழங்கி வருவதற்கான அங்கீகாரம் இதுவென்று ஏ.சி.சண்முகம் தலைவராக உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி குழும நிறுவனங்கள் பெருமிதத்துடன் சொல்கின்றன. 

 

​​​​​​​​rajini

 

 

 

இங்கிலாந்தின் மதிப்புக்குரிய ‘பெலோஷிப்’ விருது பெற்ற ஏ.சி.சண்முகத்துக்கு, இன்று சென்னை-தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது. நண்பரின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் “எல்லாருடைய இதயத்துலயும், மனசுலயும், எல்லா ஜீவன்கிட்டயும் அந்த ஆண்டவன் இருக்கிறான். ஏழைகளுக்கு உதவி செய்யறது, அதுதான் முக்கியம்.  அதைச் செய்தாலே,  ஆண்டவனுக்கு செய்த புண்ணியம். இங்கே இருக்கிறவங்கல்லாம் உழைப்பாளி.   நல்லா உழைச்சு முன்னேறிடலாம்னா, முன்னேறிட முடியாது. நல்லா உழைச்சவங்க எல்லாரும் வெற்றி பெற முடியாது. எல்லாருமே நல்லா வெற்றியடையணும், நல்லா சக்சஸ்ஃபுல்லா ஆகணும், நிறைய பணம் சம்பாதிக்கணும்னுதான் எல்லாரும் கஷ்டப்படறாங்க. எல்லாரும் அதை அடைய மாட்டாங்க. வெறும் முயற்சியாலும் உழைப்பாலும் மட்டும் இல்ல. ஆண்டவனுடைய அருள், அது இருக்கணும். நம்முடைய, நல்ல ஒரு எண்ணம் இருக்கணும். அது இருந்தால்தான் வாழ்க்கையில முன்னேற முடியும்.” என்று மனம் திறந்து பேசினார்.  

 

ரஜினியின் இந்தப் பேச்சை ஒரேயடியாக விரக்தி என்று சொல்லிவிட முடியாது. எந்த இடத்தில் பேசினாலும், அவர் ஆண்டவனைக் குறிப்பிடத் தவறுவதில்லை. ஆனாலும், லிங்கா, கோச்சடையான், கபாலி, காலா போன்ற சினிமாக்களின் மூலம், வர்த்தகரீதியாக தனக்கு கிடைத்த அனுபவமோ என்னவோ, தனி மனிதனின் வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் இத்தனை வெளிப்படையாக அவரைப் பேச வைத்திருக்கிறது. இது போதாதா?  ‘ரஜினியின் பக்குவம் யாருக்கு வரும்?’ என்று. சந்தடி சாக்கில் ‘உச்’ கொட்டுகிறது திரைஉலகம்!

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.