Skip to main content

நிர்மலாதேவி பிரச்சனையில் ஆளுநர் ஏன் முந்திக் கொண்டு செல்கிறார்? முத்தரசன் 

Published on 20/04/2018 | Edited on 20/04/2018
cpi


  

 கொத்தமங்கலத்தில் தமிழக அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உள்ள சாலையை கணக்கில் சேர்த்து சாலையை சீரமைக்கவில்லை என்றால் விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் வாடிமாநகர் விழா பொது மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் நினைவு தின பொதுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமையில் முன்னால் மாவட்டச் செயலாளர் செங்கோடன், ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.

 

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது.. ஆலங்குடியில் இருந்து கொத்தமங்கலம் வர 20 நிமிடங்கள் போதும் ஆனால் ஒரு மணி நேரம் ஆனது. கொத்தமங்கலத்தில் ஒரு இடத்தில் உள்ள சாலையில் மரண குழிகள் இருந்ததால் காரில் வருவது சிரமமாக இருந்தது. அந்த மரண குழிகள் உள்ள சாலை கிராம கணக்கிலும் இல்லை, ஒன்றிய, மாவட்ட சாலை கணக்கிலும் இல்லை தமிழக நெடுஞ்சாலை கணக்கிலும் இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. அந்த சாலையை விரைவில் ஏதாவது கணக்கில் சேர்த்து சீரமைக்கவில்லை என்றால் விரைவில் என் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடக்கும் என்றார்.

 

    தமிழகத்தில்  மக்களுக்கான ஆட்சி நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் எச். ராஜாவின் பேச்சுக்களுக்கு அவரை கைது செய்திருப்பார்கள். ஏன் தமிழக அரசு பதுங்கி இருக்கிறது என்று தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த நடை பயணத்தில் மக்கள் ஆதரவு நன்றாக இருந்தது. அதே ஆதரவு மனித சங்கிலி போராட்டத்திலும் இருக்கும் என்று நம்புகிறோம். பேராசிரியை நிர்மலாதேவி பிரச்சனையில் ஆளுநர் ஏன் முந்திக் கொண்டு செல்கிறார் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கு துணை போகிறது. அதனால் மக்கள் நலப் பணிகள் நடக்கவில்லை என்று பேசினார். 

 

    முத்தரசன் பேசிக் கொண்டிருந்த போது அருகில் ஒரு போலிசார் செல்பொனில் பேசிக் கொண்டிருந்ததால் முத்தரசனால் . அதனால் அந்த போலிசாரை அந்த இடத்திலிருந்து தள்ளி செல்லச் சொன்னார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் போலிசார் அங்கிருந்து வெளியேறினார்கள். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.