Skip to main content

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மாட்டோம்! உச்சநீதிமன்றத்தில் கேரள வாக்குறுதி!!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

 
முல்லை பெரியார் அணைக்கு பதிலாக புதிய அணையை தமிழக அரசின் ஒப்புதல் அனுமதி இல்லாமல் கட்ட மாட்டோம் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளது.
 
 
தேனிமாவட்டத்திலுள்ள தமிழக-கேரள எல்லையான இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் குமுளி தேக்கடி பகுதியில் அமைந்துள்ளது கர்னல் பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை. இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. இப்படி புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
dam
 
 
 அந்த மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் 2014 தீர்ப்பு அளித்தது. இந்த அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டக் கூடாது என அந்த தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது ஆனால் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை எனக் கூறி புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு புதிய அணையை கட்டுவதற்கான திட்டத்தை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முதற்கட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. இது 2014 உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்று கூறி இருந்தது. அதனால் கேரளா மற்றும் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடு வேண்டும் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
 
 
 
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர்களான ஏ.கே.சிக்ரி,அப்துல் நசீர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
அதுபோல் கேரள அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிட்ட வாதிட்டபோது, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கவில்லை புதிய அணை கட்டுவது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வுகள் சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் ஒப்புதல் மற்றும் அனுமதி பெறாமல் முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட மாட்டோம் என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வாதத்தை பதிவு செய்த உச்சநீதிமன்ற அமர்வு தமிழக அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக தீர்ப்பளித்துள்ளது.
 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.