Skip to main content

பழிக்கு பழியாக அரங்கேறும் கொலைகள்.

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

திருவல்லிகேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த அறிவழகன். இவர் தொடர் குற்ற வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். இவர் மீது ஏற்கனவே D5 மெரினா காவல்நிலையத்தில் சட்டப்பிரிவு 307,349, 321  உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்கில் சிறை சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் புழல் சிறையில் இருந்து  ஜாமீனில் வெளியில் வந்த அறிவழகன். நேற்று இரவு  வீட்டில் உணவு உட்கொண்டு இருந்த வரை வாகனத்தில் வந்த வினோத்,பாலாஜி  ஜூலி சுரேஸ், ஷிரிநாத் ஆகியோர் கத்தியால் அறிவழகனை சராமாறியாக வெட்டி உள்ளனர்.

CHENNAI THIRUVALLIKKENI ROWDIES INCIDENT POLICE INVESTIGATE


இந்த சம்பவம் முன் விரோத காரணத்தால் வெட்டியுள்ளார்கள். அதே மாட்டாங்குப்பம் பிரபல ரவுடியான பல்புகுமாருக்கும், சொரி விஜய்க்கும் ஏற்கனவே பிரச்சனை ஏற்கப்பட்டு வந்துள்ளது. இந்த காரணத்தால். சொரிவிஜயை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் சொரிவிஜய் தம்பியான அறிவழகனுக்கு தெரிய வர, பல்புகுமாரை ஐஸ்அவுஸ் பகுதியில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்தார். இந்த கொலையில். சிறை சென்ற அறிவழகன் மற்றும் அண்ணன் சொரிவிஜயும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 
 

அறிவழகன் மட்டும் முதலில் ஜாமீனில் வெளி வந்து பிறகு அண்ணையும் ஜாமீனில் எடுக்க முடிவு செய்திருந்த நிலையில் தான்,  பல்புகுமாரனின் கூட்டாளியான வினோத்,பாலாஜி, ஜூலி சுரேஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் அறிவழகனை கத்தியால் தலையை வெட்டி மூளையை தட்டில் வைத்து விட்டு சென்றனர். இது தொடர்பாக D6 அண்ணாசதுர்க்கம் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்