Skip to main content

குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகை!    

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு பெரியார் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக போதிய குடிநீர் வசதி இல்லாததால் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள்  முறையிட்டனர்.

e

 

 நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

e


பின்னர் நகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சார்ந்த செய்திகள்