Skip to main content

தமிழகத்தில் இரண்டாம் நாளாக 6 ஆயிரத்தை கடந்தது கரோனா!! ஒரே நாளில் 80 ஆயிரம் பேருக்கு பரிசோதனை!!

Published on 30/08/2020 | Edited on 31/08/2020
TODAY CORONA RATE IN TAMILNADU

 

 

தமிழகத்தில் இன்று மேலும் 6,495  பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 30 நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6,468  பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,22,085  ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 52,721  பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,249 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,34,436 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 80,100  கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் இன்று மேலும் 6,406  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,62,133  ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 94 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 2,729 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்