Skip to main content

குடிகாரர்களை மக்களுக்கு எதிராக மாற்றும் அதிகாரிகள்!;மதுக்கடைக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 03/02/2019 | Edited on 03/02/2019

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த அம்மேரி பகுதியில் புதியதாக அரசு மதுபானக்கடை திறக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மதுபானக்கடை திறந்தால் பள்ளி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்படுவர் எனக்கூறி அரசு மதுபான கடை அமைக்ககூடாது என்று  பல கட்டப் போராட்டங்கள் நடத்தியதுடன், மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்களும் கொடுத்துள்ளனர்.

 

 Villagers protest against liquor

 

இந்நிலையில் நேற்று மதுபானக் கடை ரகசியமாக திறக்கப்பட்டு குடிமகன்களுக்கு இலவசமாக மது பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  மதுக்கடை வேண்டாம்  எனக்கூறி போராடும்  மக்களிடையே  பிரச்சனையை  ஏற்படுத்தி  மதுக்கடையை  திறக்கலாம்  என்னும் பிரித்தாளும்  சூழ்ச்சியால் இதுபோன்று இலவசமாக குடிகாரர்களுக்கு மதுப்புட்டிகளை கொடுத்து போராடும் மக்களுக்கு எதிராக திருப்புவதற்கு இதுபோன்று செய்கிறார்கள் என கிராம பெண்கள் புகார் கூறுகின்றனர்.

 

இதனால்  ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்  மதுபானக்கடை முன்பு நின்று பெண்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

 

பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் மதுபானகடை திறக்க மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது