Published on 24/10/2018 | Edited on 24/10/2018
![vijay-sarkar](http://image.nakkheeran.in/cdn/farfuture/Jno0dzvUZzXAEafT9XbynxEsJ3IAjztzZzbvDs5bTLo/1540404584/sites/default/files/inline-images/vijay-sarkar.jpg)
விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராஜேந்திரன் என்பவர் அளித்துள்ள மனுவில், செங்கோல் என்ற தலைப்பில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். அந்த சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ் இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் செங்கோல், சர்கார் இரண்டும் ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். செங்கோல் என்று தான் எழுதிய கதையை திருடி இயக்குநர் முருகதாஸ் சர்கார் படம் எடுத்துள்ளார். ரூபாய் 30 லட்சம் வழங்கவும், சர்க்கார் படத்தில் தனது பெயரை சேர்க்கவும் உத்தரவிடக்கோரியும் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி ராஜேந்திரன் கோரியுள்ளதால், இந்த வழக்கு நாளை (25.10.2018) விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.