Skip to main content

உயிரோடு  இருந்து கொண்டே செத்துக் கொண்டிருக்கிறார்கள் - வைகோ

Published on 07/06/2018 | Edited on 07/06/2018

நீட் தேர்வு என்பது நயவஞ்சகமான செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 


கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 
 

‘நீட்’ என்கின்ற மரண கயிறை மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்து திணித்துள்ளது.  தமிழகத்தின் ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தலித் போன்ற சமூகங்களை சேர்ந்த குடும்ப பிள்ளைகள் 1150, 1170 மதிப்பெண்கள் பெற்றாலும் அவர்கள் மருத்துவ கல்லூரி கனவு, நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்டு மடிக்கிறார்கள். 

 

 

 

நான் இங்கே இறங்கியேவுடன் எனக்கு கிடைத்த அதிர்ச்சி செய்தி திருச்சியை சேர்ந்த சுபா ஸ்ரீ என்ற மாணவி  நீட் தேர்வில் வெற்றி பெற்றும் தன்னால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லையே என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தந்தை ஒரு பேருந்து ஓட்டுனர். 
 

 

This is the choice of destroying our future

 

இதைப்போல் தான் பிரதீபா எழுதிய கடிதத்தில் ஏற்கனவே 1170 மார்க் எடுத்ததால் கிடைத்தது. ஆனால் தனியார் கல்லூரியில் கிடைத்தால் பணம் கட்டமுடியவில்லை. அடுத்த வருடம் அரசு கல்லூரியில் வாங்கிவிடுவேன் என்று திரும்பி நீட் தேர்வு எழுதினார். இந்த தடவையும் கிடைக்கவில்லை என்று அப்பாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ‘உங்க ஆசை கனவை நிறைவேற்ற முடியவில்லை நான் பாரமாக இருக்க விரும்பவில்லை நான் போய்யிட்டு வரேன்’ அப்படி எழுதி வைத்து இறந்திருக்கிறார். அனிதாவும் இப்படிதான் தற்கொலை செய்து கொண்டார். 

 

 

 

இன்றைக்கு 91.1 சதவீதம் +2 வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால் நீட் என்கிற முறையில் தமிழ்நாடு 34வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 60 சதவீதம் 65 சதவீதம் தேர்ச்சி பெற்ற மற்ற இடங்கள் எல்லாம் முதல் இடத்துக்கு வந்துவிட்டது. நம் எதிர்காலத்தையே அழிக்கக்கூடியது இந்த நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்கமான வேலை. இந்த நீட் தேர்வை திணிக்க முற்படுவது வளரும் பிள்ளைகளின் கல்வியை அழிக்கும் நோக்கம். இந்த நீட் தேர்வு பல உயிர்களை காவு வாங்கிவிட்டது. உயிரோடு இருக்கின்ற பிள்ளைகளும் தற்கொலை செய்யாவிட்டாலும் கூட மனதுக்குள் மடிந்து, நொடிந்து உயிரோடு  இருந்து கொண்டே செத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.