Skip to main content

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலக வாடகை ஒதுக்கீடு!

Published on 13/01/2022 | Edited on 13/01/2022

 

Urban Housing Development Board Office Rental Allocation!

 

தமிழ்நாடு அரசு இன்று (13/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் இன்று (13/01/2022) வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப., வாரிய கண்ணகி நகர் திட்டப்பகுதியில் 10862 சதுர அடியில் உள்ள கட்டிடத்தினை பல இலவச சேவைகள் மேற்கொண்டு வரும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்திற்கு குறைந்த வாடகையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையை டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மாரிசாமியிடம் வழங்கினார். 

 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கண்ணகி நகர் திட்டப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்புதாரர்களின் குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து விளையாட்டு பயிற்சிகள், தற்காப்பு பயிற்சிகள், பண்பாட்டு பயிற்சிகள், யோகா, நிலவொளி கல்வி (எண்ணும் எழுத்தும் கற்பித்தல்), மரம் நடுதல், டி.என்.பி.எஸ். குரூப் 4 தேர்வு பயிற்சி, முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் படிப்பிற்கு அனைத்து உதவிகளும் வழங்குதல், பொது நூலகம் அமைத்தல் கல்வி சுகாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம், சமூகம், சட்டம் நிர்வாகம், பாலின சமத்துவம், மனித உரிமைகள், மகளிர் உரிமைகள், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான முறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருதல் பேரிடர் காலங்களில் (வெள்ளம், கரோனா ஊரடங்கு காலத்தில்) குடியிருப்புகளில் உள்ள அனைவருக்கும் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி வருவதால், குடியிருப்புகளில் உள்ள மாணவ, மாணவியர்கள், மகளிர் மற்றும் அங்கு வசிக்கும் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வாரிய உதவிச் செயலாளர் (குடியிருப்பு) ஆ.கற்பகம் உடன் இருந்தனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.