Skip to main content

மீள முடியாமல் தவிக்கும் முத்துப்பேட்டை!!

Published on 20/11/2018 | Edited on 20/11/2018

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிய கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இன்னும் பல கிராமங்கள் மீளமுடியாத நிலையில் பெரும் துயரை சந்தித்து வருகிறது.

 

rain

 

அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளால் மக்கள் அன்றாட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இன்றளவும் தவித்துவருகின்றனர். அரிசி, பால், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, நாப்கின் உள்ளிட்ட அடிப்படை பொருட்கள்  கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

rain

 

சில கடைகளில் ஒரு லிட்டர் பால் 80 ரூபாய்க்கு விற்கப்படுத்தாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தில்லைவிளாகம், ஜம்புவானோடை பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து உள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கண்ணீர் மல்க தங்களது நிலைமையை அதிகாரிகளிடம் எடுத்து வைத்து வருகின்றனர்.

 

rain

 

தென்னையை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை தொலைத்து நிர்கதியாகி உள்ளனர். அதேபோல் முத்துப்பேட்டையில் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட துப்புரவுதொழிலாளர்கள் உதவியுடன் முத்துப்பேட்டையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் அதிகப்படியான மின் பணியாளர்களும் முத்துப்பேட்டை மீள பணியாற்றி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.