Skip to main content

’எல்லோரும் இந்நாட்டு செய்தியாளர்களே!’- உணர்வுடன் உரைத்திட்ட இதழியல் மாணவர் கூட்டமைப்பு!

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
srinivasan


சிவகாசியை அடுத்துள்ள ஆமத்தூரில் இயங்கும் ஏ.ஏ.ஏ.பொறியியல் கல்லூரியில், இந்திய மின்னணு இதழியலாளர் சங்கம் (DiJAI) சார்பில், இதழியல் மாணவர் கூட்டமைப்பு ஒன்றை துவக்கினார்கள். ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி, அரசன் கணேசன் பாலிடெக்னிக், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி, அருப்புக்கோட்டை ரமணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களிடையே உரை நிகழ்த்திய இந்திய மின்னணு இதழியலாளர் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன் “1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இன்டர்நெட்டை வணிக பயன்பாட்டுக்காக இந்தியாவில் கொண்டுவந்தார்கள். 22 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்றைக்கு இன்டர்நெட் ஒரு மகா பூதம் மாதிரி வளர்ந்திருக்கிறது. இன்டர்நெட்டை உபயோகித்து செய்யக்கூடிய ஜர்னலிசத்தைத்தான் நாம் டிஜிட்டல் ஜர்னலிசம் என்கிறோம். அடுத்து, வெப்சைட், சோசியல் மீடியா என்று ஒவ்வொருவிதமாக கம்யூனிகேசன் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் 35 சதவீதம் பேர் இன்டர்நெட் உபயோகிக்கிறார்கள். மொபைல் யூஸ் பண்ணுகிறார்கள். 46 கோடி பேர் பயனடைகிறார்கள்.

டிஜிட்டல் ஜர்னலிசத்தில் டெக்ஸ்ட் மட்டும் கொடுத்தால் படிக்கிறது கஷ்டம். அதனால் படங்களையும் மிக்ஸ் பண்ணிக் கொடுக்க வேண்டும். இப்போது இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் ஒரு ஜர்னலிஸ்ட் ஆக உருவாகி வருகிறார்கள். என் கையில் ஒரு மொபைல் இருக்கு. என் கையில் ஒரு இன்டர்நெட் இருக்கு. என் கையில் ஒரு லேப்டாப் இருக்கு. இன்றைக்கு நாமே ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம். ஒரு வெப்சைட் யூஸ் பண்ணலாம். நாமதான் எடிட்டர்.. நாமதான் பப்ளிஷர்.. இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், டெக்னாலஜியை எவ்வளவு தவறாகப் பயன்படுத்துகிறோம் தெரியுமா? அதாவது ஃபேக் நியூஸ். பள்ளி வேன் ஆக்சிடெண்ட் ஆயிருச்சு.
 

students


உயிருக்குப் போராடும் 30 பள்ளிக்குழந்தைகளுக்கு உடனடியாக ரத்தம் தேவை இந்த ஃபேக் நியூஸ் ஐந்து வருடங்களாக ஓடிக்கிட்டிருக்கு. மொபைலில் எது வந்தாலும் எல்லாவற்றையும் நாம் படித்துவிடுவதில்லை. டக்குன்னு ஒரு ஃபார்வேர்ட். காலையில் எந்திரிச்சதும் பல் துலக்குகிறோமா? குளிக்கிறோமா? அதெல்லாம் பிறகுதான். முதலில் ஃபார்வேர்டிங். ஊருல எவன் எவனோ அனுப்புற குப்பையை எல்லாம் ஃபார்வேட் பண்ணிக்கிட்டே இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.” என்றெல்லாம் எடுத்துச் சொல்லி, பயிற்சி அளித்தார்.

டிஜிட்டல் ஜர்னலிசத்தை நுட்பமாகக் கற்று, மக்களுக்குத் தேவையான செய்தியை மட்டுமே அளித்திட, ஆர்வத்துடன் ஆயத்தமாகி வருகிறார்கள் இளம் இதழியலாளர்கள்!

சார்ந்த செய்திகள்

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.