Skip to main content

படகில் சென்று ஓட்டுப்பதிவு செய்த இரண்டு கிராம மக்கள்..!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

Two villagers who went by boat and registered their vote

 

பழவேற்காடு அருகில் உள்ள தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் ஆகிய இரண்டு கிராமங்களில் சுமார் 250 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓட்டுப்பதிவு மையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோரைக்குப்பம் கிராமத்தில் உள்ளது. சாலை வழியாக சென்றால் 7 கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்பதால், படகில் பக்கிங்ஹாம் கால்வாயைக் கடந்து சென்று இரண்டு கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்களும்  ஓட்டுப்பதிவு செய்தனர்.

 

தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் கிராமங்களுக்கும், கோரைக்குப்பம் கிராமத்திற்கும் இடையே 500 மீட்டர் அகலத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளது. தாங்கல்பெரும்புலம், இடையன்குளம் ஆகிய இரண்டு கிராம மக்களும் ஓட்டுப்பதிவு செய்ய கோரைக்குப்பத்திற்கு சாலை வழியாக செல்ல வேண்டுமேயானால் 7 கி.மீ பயணிக்க வேண்டி இருக்கும். போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் அங்கிருந்த கிராம மக்கள் பக்கிங்ஹாம் கால்வாயைப் படகின் மூலம் கடந்து கோரைக்குப்பத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்துவிட்டு திரும்பினர். தேர்தல் சமயங்களில் இதுபோன்ற சிரமமான சூழல் நிலவுவதால், வாக்குச்சாவடியை தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; வாக்காளர்களின் எண்ணிக்கையை அறிவித்த தேர்தல் ஆணையம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
The Election Commission declared the number of voters for Lok Sabha elections

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த 6 ஆம் தேதி சென்னை வந்திருந்தனர். அதன்படி தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தை போலவே, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாடு முழுவதும் 96.88 கோடி பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

அதில், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 2.63 கோடி உயர்ந்துள்ளது. புதிய வாக்காளர்களில் 1.41 கோடி பேர் பெண்கள் ஆவர். 17 வயது நிறைவடைந்த உடனேயே பதிவு செய்தவர்கள் 10.64 லட்சம் பேர் ஆவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைவிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மக்களவைத் தேர்தல்; கடந்தாண்டை விட அதிகரித்த வாக்காளர்கள்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
There are 96 crore people who are eligible to vote in the Lok Sabha elections

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. 

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மொத்த வாக்காளர்களில் முதல் தலைமுறை வாக்காளர்களான 18 வயது முதல் 19 வரை உள்ளவர்கள் 1.73 கோடி பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 96 கோடி பேரில் 47 கோடி பேர் பெண் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின் போது இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் 96 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.