ஒய்வு பெற்றவர்களை மறு நியமனம் செய்ய முயல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை இரயில் நிலைய்ததில் மேற்கு நுழைவாயில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மத்திய அரசு இரயில்வேயில் உள்ள 715 காலி பணியிடங்களை இரயில்வேயில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்களை மறு நியமனம் செய்ய முயல்வதை கண்டித்தும், பட்டப்படிப்பு படித்து வேலை வாய்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
ஷாகுல்