Skip to main content

சரக்கு வாகனம் மோதி 4 பேர் உயிரிழப்பு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Trichy District Samayapuram Temple Devotees incident 

தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலுக்கு  பக்தர்கள் தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று 5 பேர் மீது மோதி கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்