Skip to main content

 பொங்கல் பண்டிகை; ரயிலில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு!

Published on 12/09/2024 | Edited on 12/09/2024
Train ticket booking has started on pongal

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (12-09-24) முதல் விரைவு ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

அடுத்தாண்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி போகிப் பண்டிகையும், 14ஆம் தேதி தைப்பொங்கலும், ஜனவரி 15 ஆம் தேதி மாட்டுப்பொங்கலும், ஜனவரி 16ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. ரயில் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) இணையதளத்திலும், ரயில்நிலைய டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதே போல் ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் நாளை (13-09-24) முதல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்பவர்கள், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகையன்று பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்